எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 31 மே, 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்


12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது.  நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
   - என். நஜ்முல் ஹுசைன்

(தொடர்ச்சி )


+++++++++++++++++
7. எஸ்.  தனபாலன்
+++++++++++++++++

ஓடையது சலசலக்கும் பாடல்
ஓயாது ஒலித்துவிடும் காதில்
வாடையது மறையாமல் இன்னும்
ஸ்ரீதர் -
வாஞ்சையது நெஞ்சத்தில்
மின்னும்

மின்னும் பாடலதன் வரிதந்த கவிஞன்
கவிஞா உனக்கு வரி செலுத்தும்
வகவம் எந்நாளும்

கவிதைமேல் காதல் இவன் கொண்டான்
வகவத்தை தன்உறவு என்றான்
மென்மேலும் சீருறவே வகவம்
துணை நிற்பேன் என்றும் இவன்
சொன்னான்
அதற்கு
எஸ் போட்ட தனபாலன் எழுக
கவிதை தரவேண்டும்
கன்னல் தேன் ஒழுக !

+++++++++++++++++++
8. க. லோகநாதன்
+++++++++++++++++++

சுவைபடவே கவிதை சொல்லும் ஒருவன்
வகவம் கலகலக்க கலக்கும் நம் கவிஞன்
இவன் எழுந்து கவிபாட முன்னே
சபையே
சிரிப்பதற்கு தயாராகி நிற்கும்

காதுகளை கூர்மையென ஆக்கி - இவன்
கருத்துகளில் மெய்மறந்து போகும்
இவன் பேச்சு வழக்கினில்தான் சொல்வான்
என்றாலும்
பல வழக்குத் தொடுப்பான்
இவன் அனுபவத்தை கேட்கும்
எமையெல்லாம்
சிரிக்க வைத்து
கொல்லாமல் கொல்வான்

மட்டக்  களப்புதான் இவனின் ஊரு
கொழும்பினிலே பெற்றுக் கொண்டான் பேரு
க.லோகநாதன் எங்களுக்குப்
 பேறு
இதோ வருகின்றான் -
நான் சொன்னதெல்லாம் உண்மையா
என்று பாரு!

(தொடரும்)

திங்கள், 15 மே, 2017

கவிஞர் நியாஸ் ஏ. சமத்