எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 11 டிசம்பர், 2018

கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன்




வலம்புரி கவிதா வட்டத்தின் 54 வது கவியரங்கு 22-11-2018 வியாழக்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கினை தலைமையேற்று நடத்த செயலாளர் கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன். - என். நஜ்முல் ஹுசைன் , தலைவர், வகவம்


ஐம்பத்தி நான்காவது வகவம் இன்று
வாகையுடன் நடக்கிறது என்றால் அன்று
தெம்போடு எழுந்த இவன் துணிச்சலாலே
தேவை யென கருதி
எமை அசைத்தாலே
சுருண்டேதான் படுத்திருந்த
வகவம் தன்னை
வியர்வையினை சிந்தியிவன் விழிக்கச் செய்தான்
புகழீட்டி வலம்புரியும்
நிமிர்ந்தற்கு முழு முதலாம் காரணமும் இவனாய் ஆனான்

ஆரம்பித்து மூலையிலே
உறங்கவிட்டோம்
தூரம் நின்று பழங்கதைகள்
பேசி நின்றோம்
நேரமிது எம் கவிஞர் தூக்க
மகற்ற
ஆர்ப்பரித்து இவன் வந்தான் ஆரம் பித்தான்

ஆரம் பிய்த்து இதை அழுக்காய்
ஆக்கிடாமல்
சோரம் தான் வலம்புரிகள்
ஆகிடாமல்
சோர்வின்றி இவன் உழைத்தான்
இவனைத்தானே எமதின்றின்
ஆரம்பம் என்றே சொல்வேன்
(இவனைத் தான் எமதின்றின்
ஆரம்பம் என்பேன்)

நாம் மீண்டு எழ
ஆரம்பம் இவனே என்பேன்