எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 28 ஜூன், 2011

பாராட்டு

அதிகம்
பாராட்டும்போது
கவனமாயிருங்கள்
சுனாமி கூட
அதிகம் பார் ஆட்டிய
செயல்தான்

திங்கள், 20 ஜூன், 2011

எனது மனைவிக்கான மரபுக் கவிதை


எனது தந்தையின் பெயர் கே. கே. எம். மொஹிதீன். தாயாரின் பெயர் சித்தி சௌதா உம்மா. எனது வளர்சிக்கெல்லாம் அடித்தளம் போட்டவர் எனது அன்புத் தந்தையார்தான். ஆரம்ப நாட்களில் எனது ஆக்கங்கள் எம்.எம்.நஜ்முல் ஹுசைன் என்ற பெயரிலேயே வெளிவந்தன. மலேசிய கவியரங்கிலும் எம்.எம்.நஜ்முல் ஹுசைன் என்றுதான் குறிப்பிடப்பட்டேன்- எனது பாஸ் போர்ட்டில் உள்ளவாறு. என்றாலும் இப்போது நான் என். நஜ்முல் ஹுசைன் என்றே எனது ஆக்கங்களை படைத்து வருகிறேன். ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். அது எத்தனைப் பேர் வாழ்வினில் உண்மையோ தெரியாது. ஆனாலும் அது எனது வாழ்வில் நிதர்சனமான உண்மை. இன்றைய எனது எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் எனது மனைவிதான் இருக்கிறாள். அவள் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக கடமை புரியும் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன். எனது வெற்றியின் பின்னால் இருக்கும் எனது மனைவியை எனது பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டேன். அதுதான் என். நஜ்முல் ஹுசைன் என்ற எனது பெயர்.
இப்போது புதுக் கவிதைகளை எழுதி வரும் நான் ஆரம்பத்தில் மரபுக் கவிதைகளையே எழுதி வந்தேன். இங்கே இருப்பது எனது மனைவிக்காக நான் எழுதி அந்த நாளில் இலங்கையின் பிரபல பத்திரிகையான 'சிந்தாமணி'யில் 03 . 01 . 1988 ல் வெளி வந்த மரபுக் கவிதை.
Wall Photos