வலம்புரி கவிதா வட்டத்தின் 122 ஆவது கவியரங்கு 02/05/2026 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் மலாய்கவி டிவாங்சோ அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
மதிவளர் மன்றம் என்று மாணவர் நாங்கள் அன்று மாண்புடன் ஒன்று சேர்ந்து ஆற்றலை வளர்த்த வேளை தோளுடன் தோளும் சேர்த்து எம்முடன் ஒன்றிணைந்து தோழராய் வந்தவர்தான் இன்றெங்கள் தலைமை ஏற்றார்
தாய்மொழி தன்னை விடவும் தமிழ்மொழி மீது பற்று அதிகமாய் கொண்டதாலே எங்கள் வகவத்து மேடை தனிலும் தன்பெயர் பொறித்துக் கொண்டார்
கவிதைகள் எழுதிக் குவித்து கற்பனை தன்னைப் பெருக்கி காரியம் ஆற்றும் இவரோ முக நூலிலும் எழுந்து நின்றார்
ஒவ்வொரு நாளும் இவர்க்கு சான்றிதழ் வழங்கி மகிழ குழுமங்கள் காத்து நிற்கும்
சான்றிதழ் வாங்கிக் குவிக்கும் கவிஞர்கள் பட்டியலில் இவரும்தான சேர்ந்து கொண்டார்
தமிழிலே கவிதை படைக்கும் ஆற்றலே உள்ள இவரும் தன் தாய்மொழி தனையும் நினைத்து தன்பெயர் சூடிக் கொண்டார்
மலாய் மொழி வீட்டு மொழியாய் ஆட்சியே செய்த போதும் இதயத்தில் தமிழை ஏந்தி தன்மொழி ஆக்கிக் கொண்டார்.
மலாய்கவி டிவாங்சோ என்னும் மனங்கவர் கவிஞர் இன்று எங்களின் வகவ மேடை அலங்காரம் செய்ய வந்தார் - அதிகாரம் செய்ய வந்தார்
அரங்கினின் தலைமை ஏற்று அழகுற தமிழை வடித்து எங்களின் மனங்கள் எல்லாம் மகிழ்ந்திட செய்து நிற்பார்
கவிஞர் மலாய்கவி டிவாங்சோ
வான் மழை பொழியும் சோவென்று இன்று கவிதை மழை பொழியும் டிவாங்சோ என்று
வாருங்கள்
கவிஞர் மலாய்கவி டிவாங்சோ
