எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 9 பிப்ரவரி, 2011

கவிக்கோவின் கவிதை

“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.

அருஞ்சொற்பொருள் :
பால் நகையாள் = பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்காதவள்
வெண்முத்துப் பல் நகையாள் = முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால் நகையால் = காற் சிலம்பினால்;
வாய் நகை போய் = புன்னகை மறைந்துப்போய்
கழுத்து நகை = மாங்கல்யம் (தாலி)

கவிக்கோவின் இக் கவிதை குமுதம் சஞ்சிகையில் எழுபதுகளில் இடம்பெற்ற போது இதனை வாசித்த எனது நண்பர் தமிழ்த் தென்றல் எஸ். எம். அலி அக்பர் மாதவி இல்லாத
சிலப்பதிகரமா? இக் கவிதையில் ஒரு எழுத்தை மாற்றுவதன் மூலம் மாதவியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றார். அவர் இதனை இப்படி மாற்றினர்.

“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையால்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.

பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கக் கூடிய வெண் முத்துப் போன்ற
பற்களை உடைய மாதவியால் கண்ணகியாள் கால் நகையை விற்கப்போய் தனது கணவனை இழந்த கதை.

- என். நஜ்முல் ஹுசைன்