24/05/2026 ஞாயிறு காலை கொழும்பு புதுச்செட்டித் தெரு, ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் கவிஞர் எழுத்தாளர் ந. தாமரைச்செல்வியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
பல கலைநிகழ்ச்சிகளோடு ஒரு கவிச்சமரும் இடம்பெற்றது.
"பரபரப்பான வாழ்க்கையில்
பல்லாங்குழி ஆடும் துயரத்திற்கு காரணம்
கணவனே, மனைவியே" என்பது தலைப்பு.
மனைவியே என்ற தலைப்பில் நானும் கவிச்சமர் செய்தேன்.
அதிர்ஷ்டவசமாக எனது கவிதையை நண்பர் மொழிவாணன் தனது கைபேசியில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
Neethirajah Molivaanan அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
கலைஞானச்சுடர் சுபாஷினி பிரணவன் நடுவராக இருக்க கவிஞர்கள் எம். பிரேம்ராஜ், ந. தாமரைச்செல்வி, இறைஞானக்கவி ரமீஸ், தயாளினி ஆகியோர் சமர் புரிந்தனர்.
- என். நஜ்முல் ஹுசைன்
