எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 17 செப்டம்பர், 2015

ஈமானிய கவசத்தோடு………..







இது
றப்பு நாடு
இங்கு உன்
றப்பு நாடு

என்று
ஆண்டுதோறும் அழைக்கின்ற
அரபு நாடு

மக்கம்
பக்கம் வைக்கிறது
சொர்க்கம்

இதயத்துக்கும்
இஹ்ராம் கட்டி
வந்தவர்களெல்லாம்
வெற்றிபெற்றோர்
வர்க்கம்

கரை புரண்டோடும்
மக்கள் வெள்ளத்தில்
கறை
கரைந்து போகிறது

தேச
எல்லைக்கோடுகள்
களைந்து

பல
வண்ணப்பூக்கள்
வெள்ளைப்பூக்களாய்

இதயங்கள் எல்லாம்
இங்கே
ஒன்றாய் வைத்து
தைக்கப்படுகின்றன

மனதுக்குள் இருக்கும்
ஷைத்தான்கள்
உதைக்கப்படுகின்றன

தக்பீர் ஒலியின்
உன்னத நாதம்
அங்கே
ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது

ஒளி
பரப்பும் ஹாஜிகள்
இனி அதை
உலக
மூலை முடுக்குகளெல்லாம்
ஒலிபரப்புச் செய்வார்கள்

உலக சவால்களை
முறியடிப்பதற்காக
மனங்கள்
பக்குவப்படுத்தப்படுகின்றன

முஸ்லிம் உம்மத்தை
துவம்சம் செய்ய
உம்மத்தம் பிடித்து
அழைவோரே

விலகிப் போங்கள்

ஈமானிய கவசம் அணிந்து
ஹாஜிகள்
புறப்பட்டு வருகிறார்கள்

இனி இந்த உலகம்
அவர்கள் வசம்

-    என்.நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மேமன் கவி


Memon Kavi: Man of Pakistani origin makes waves as Tamil poet










29-8-2015 அன்று இடம்பெற்ற 19வது வலம்புரி கவிதா வட்ட கவியரங்கிற்கு தலைமை தாங்க இலக்கிய வித்தகர் கவிஞர் மேமன் கவிக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -

மேல்வாரியாய் எதையும்
செய்ய மாட்டான் - தன்
மேல் வாரிப் போட்டேதான்
முனைந்தே நிற்பான்
ஆழ்கடலில் மூழ்கி ஒரு
முத் தெடுக்கும்
ஆள்போலே இலக்கியத்தில்
இறங் கிடுவான்

அரிதான தகவல்களைப்
பிரித் தெடுத்து
அதற்காக மூளையையும்
பிழிந் தெடுத்து
பரிசாக கோத்தெடுத்துத்
தந்திடுவான்
அவனை
இலக்கிய
வித் தகன்; என்றால்
ஓப்பமாட்டான்

எங்கெங்கோ பரந்திருக்கும்
இலக்கியத்து
உறவுகளை
தன் உறவாய்
தான் நினைத்து
கை கோத்து
இலக்கியத்தில் சிற கடிப்பான்

நூல்களுக்குள்
தன் மனதை யேபுதைத்து
நாளும்
புதியவைகளைக் கற்று
தனை வடிப்பான்

இவன்
ஆற்றல் களாலே சிலிர்க்கும்
இந்தப் புவி
இவன்
எம் மனதை ஆட்சி செயும்
மேமன்கவி

கவிஞா மேமன்கவி
இனி -
கவியரங்கை  தலைமேலே
ஏற்றே நடத்து
எங்கள் கவிஞர்களின்
எடைகளையே
சொல் நீ நிறுத்து

எங்கள் இதயங்களை
உன் அருகே
இழுத்தே நிறுத்து

-     என். நஜ்முல் {சைன்