எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 12 டிசம்பர், 2022

Worshipped Leg

 "Sorry" said the worshipper

Jumped over me kicking
I said
"No I must thank you
For letting your worshipped leg
Touching me"

- Najmul Hussain 

செவ்வாய், 11 அக்டோபர், 2022

ஆர். பி. யசோதரை

 வலம்புரி கவிதா வட்டத்தின் 80 ஆவது கவியரங்கு 09/10/2022 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் #ஆர்.#பி. #யசோதரைக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன். 


   - என். நஜ்முல் ஹுசைன்,

     தலைவர்,

     வலம்புரி கவிதா வட்டம்

    (வகவம்)


பல்வேறு ஆற்றலினை தன்னகத்தே

பவ்வியமாக வைத்திருக்கும் ஒரு கவிஞர்

கல்விக்கண் திறப்பதற்காய் பாடுபடும்

கண்ணியத்திற்குரிய தொரு ஆசிரியர்

சொல்லெடுத்து கவிதையிலே சமர்

செய்து

சிறந்தவர்கள் பல்லோரின் பாராட்டை

நல்விதமாய்  அள்ளியவர்; சக்தியிலே

சுவையுடனே நிலாச்சோறு ஊட்டியவர்


வலம்புரியின் கவியரங்கை நேசித்து

வாஞ்சையுடன் கவிதைகள் முழங்கியவர் 

சிலம்போசை சொற்களிலே தமிழ் குழைத்து

சிறப்புடனே சீர்பெற்று விளங்கியவர் 

பலனாக இன்றெங்கள் வகவத்தின்

தலைமையிலே பெருமையுடன் தானிருந்து 

கலகலப்பாய் கவியரங்கை நடத்திடவே 

கவிஞர்கள் அணிவகுக்க துணைநின்றார் 


மனமகிழ்ந்தே தலைமையினை தானேற்க

மாட்சியுடன் இங்கின்று வந்தவரை

கனவோடும் கவிதைகளை நெஞ்சினிலே 

களிப்புடனே சுகமெனவே சுமந்தவரை

இனங்கண்டே நாமின்று வரவேற்றோம்

இருகைகள் - இருக்கையும்

நாம் தந்தோம் 


தொடுகிறதா இவர் கால்கள் இத்தரை

தொட்டிடுவார் கவிஞர்களின் மனத்திரை

மிடுக்குடனே பதித்திடுவார் முத்திரை

மிளிர்ந்திடவே வருகின்றார் யசோதரை 


கவிதாயினி

ஆர். பி. யசோதரை

காட்டுங்கள் உங்களது பொறிமுறை

கைவந்ததுதானே உங்களுக்கு இத்துறை

கவியரங்கு உங்களிடம்; விலகியது திரை 


தொடங்குங்கள் தொடருங்கள் 

கவியரங்கை

கவியரங்கத் தலைவரே

ஆர். பி. யசோதரை

புதன், 23 மார்ச், 2022

கவிஞர் கம்பளை ரா. சேகர்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 78 ஆவது கவியரங்கு 17/03/2022 வியாழக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்துமாறு நான் கவிஞர் கம்பளை ரா. சேகர் அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -


என். நஜ்முல் ஹுசைன்

தலைவர்

வகவம்



வகவத்தில் கவிதை பாட
வேண்டுமே என்ற ஆவல் 
வாஞ்சையாய் இவரை வருட
அகத்திலே ஆர்வம் துள்ள
கரத்திலே கவிதை ஏந்தி
அதனுடன் கெமெரா ஏந்தி
முகத்திலே மகிழ்ச்சி பொங்க
மலையகம் முன்னே நிற்க
தகதக என்று இவரும்
பல மைல் தாண்டி வருவார்
சோர்வினை கண்டதில்லை


பத்திரிகை நிருபர் நல்ல புகைப்படக்காரர் இவரும்
பவ்வியமாக வந்து எம்முடன் சேர்ந்ததாலே
முத்திரைப் பதிக்கும் படங்கள்
முழுவதும் தந்து எங்கள்
கவிஞர்கள் இதய வீட்டில்
தனியிடம் பிடித்துக் கொண்டார்
நித்திரைப் போக்க வேண்டும் மலையகம் என்று பாடி
உணர்வினை நெஞ்சிலூட்டி
உயர் இடம் பெற்றுக் கொண்டார்

வலம்புரி கவிதா வட்ட கவிதையின் அரங்கு தன்னை
தலைமையே ஏற்று செய்க
என்று நாம் வேண்டி நின்றோம்
உளம்நிறை பூரிப்போடு சரியென
வந்து நின்றார்
கம்பளை சேகர் இன்று

சரிந்திடா சரித்திரத்தை படைத்திடும்
வகவ மேடை
சிறப்புற வேண்டும் என்றே
தன்பணி செய்ய வந்தார்
கவிஞர் கம்பளை ரா. சேகர்


கவிஞர் கம்பளை ரா. சேகர்
படம் பிடித்து கவிதை பாடும்
உங்களிடம்
எங்கள் கவியரங்கத் தலைமை
நாங்கள் படம் பிடித்து வைத்துக் கொள்ள
எங்கள் கவிஞர்களுடன் காட்டுங்களேன்
உங்கள் திறமை !

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

கவிஞர் ஏ. கே. இளங்கோ

 வலம்புரி கவிதா வட்டத்தின் 74 ஆவது கவியரங்கம் 18/11/2021 அன்று நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமை தாங்கி நடாத்த கவிஞரும் கலைஞருமான ஏ. கே. இளங்கோ அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.


- என். நஜ்முல் ஹுசைன்

தலைவர்,

வலம்புரி கவிதா வட்டம்

(வகவம்)


தமிழ் உணர்வோடு இங்கு வந்து 

மனங் கவர்ந்தான்

தன் உறவெனவே எமை நினைத்து பின் தொடர்ந்தான்

அமிழ்ந்தேதான் கலையுலகில் இருந்தாலும்

கவியுலகில் பெயர் வைக்க 

முடிவு கொண்டான்

எமை மயக்கும் வண்ணம் இவன் தமிழெடுத்து

எழிலான கவிதை களால் 

எமை கவர்ந்தான்

சுமை என்றே நினைக்காமல் கவியரங்க 

தலைமைக்கே தயார் என்றே 

முன் வந்தான்


பண்பட்ட ஒரு கலைஞன் 

தலைநகரில்

பெயர் பெற்றே இருக்கின்றான்

தொலைக்காட்சி

விண்தொட்ட சினிமாவில் பங்களிப்பை 

செய்கின்றான் அதனோடு

புண்பட்ட கலைஞர் நிலை தானுயர்த்தும்

பெரும் பணியில் கூட இவன்

இருக்கின்றான்


இளங் கோவாய் முடி சூடி

இருக்கின்ற

இளங்கோவே இன்று எங்கள்

தலைமைக்கு

வளங் கொழிக்கும் தமிழ் எடுத்து

பண் பாட 

நம் கவிஞரொடு படையெடுத்து

வருகின்றான்

களம் இதிலே விளையாடி நற்கவிதை

காதுகளில் பாய்வதற்கே செய்து எங்கள்

வலம்புரிக்கே வளம் சேர்ப்பான்

வாழ்த்தி மகிழ்வோம்.


கவிஞர் ஏ. கே. இளங்கோ

இன்றைய கவியரங்கத் தலைமையை

தந்து நின்றோம்

எங்கள்

கவிஞர்க்கே அணி சேர்த்தால்

மகிழ்வு கொள்வோம் !