எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் "பாரம்பரியம் " பேட்டி நிகழ்ச்சி







இலங்கை வானொலி முஸ்லிம் சேவை "பாரம்பரியம்" பேட்டி நிகழ்ச்சி. என்னை பேட்டி காண்கிறார் நண்பர் எம் எஸ் எம் ஜின்னா 

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

கவிஞர் எம். எஸ். தாஜ்மஹான்

வலம்புரி கவிதா வட்டத்தின் 45 வது கவியரங்கம் 31/01/2018 அன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்க தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் எம். எஸ். தாஜ்மஹான் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன், தலைவர், 
வலம்புரி கவிதா வட்டம்

 தாகத்தோ டிவனும் தான்
இங்கே வந்தான்
தேன் கவிதை யேகேட்டு
மோகம் கொண்டான்
 வேகத்தோ டடியெடுத்து
 முன்னே வந்து
 வேட்கை யுடன் கவி படிக்க ஆவலுற்றான்

 படிப் படியாய் படிப் படியாய்
வகவப் படிகள்
 பாங்காகவே ஏறி கவிதை சொன்னான்
அடி மேலே அடி அடிக்க
நகரும் அம்மி
 இவன் கவிதையிலே போட வந்தான் புதிய கும்மி

 நயம் உளது பொருள் உளது
சுவையும் உளது
 நயந்தேதான் சொன்னவர்க்கு
 பெரிய மனது
சுயம் காட்டும் இவன் கவிதை போக்கை வாழ்த்த
 சுவைக்கின்ற வகவத் திற்குளது மனது

 தயங்காது தலைமையினை ஏற்றுக் கொள்ளு
 தாஜ்மஹானே கவிஞர்களின் சிந்தை அள்ளு
 இயங்காத இதயங்களும் இசைந்து ஆட
ஈர்க்கின்ற கவிதைகளால்
 நெஞ்சில் நில்லு

 கவிஞர்களை ஒப்படைத்தேன் உன்றனுக்கு
கவிமகனே ஒப்படை தேன்
 எங்களுக்கு
 கவியரங்கை தலை யேற்ற தாஜ்மஹானே - உன்
 தலைமையிலே பாயட்டும்
 புதிய தேனே!