எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 31 டிசம்பர், 2015

Islamic Song written by N. Najmul Hussain








அல்லாஹ்வின் பாதையிலே அழைத்தே வந்தாய்
அல்லல்களை களையும்வழியும் சொல்லித் தந்தாய்
பொல்லாத தீங்கெல்லாம் போக்கியே நின்றாய் - ரமழானே
பெருமையுடன் விடையும் பெற்றாய்


எத்தனையோ பாவத்திலே மூழ்கிக் கிடந்தோம்
எம்மை நாம் மறந்தே மயங்கி இருந்தோம்
நித்திரையை கலைத்தே விழிக்கவும் செய்தாய்
நிம்மதியை மறுமையிலே கிடைக்கச் செய்தாய்
சொத்தான ரமழானே எங்கள் வாழ்க்கை
சொர்க்கத்தில் தொடர்வதற்கு வழி நீ அமைத்தாய்                               

(அல்லாஹ்வின் பாதையிலே..)


எங்களையே மறைவழியில் வைத்தே நின்றோம்
எம்மோடு ஈமானை சுமந்தே கொண்டோம்
தங்காத செல்வத்தை மகிழ்ந்தே தந்தோம்
தாரணியில் வறுமையினை குறைத்தே வைத்தோம்                             
சங்கைமிகு ரமழானே உன்னால் நாங்கள்
சத்தியத்தை உண்மையிலே உணர்ந்தே வென்றோம்    

(அல்லாஹ்வின் பாதையிலே)




-              என். நஜ்முல் ஹுசைன்