எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 20 செப்டம்பர், 2017

கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ்

வலம்புரி கவிதா வட்டத்தின் 41 வது கவியரங்கம் 05/09/2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்
- என் நஜ்முல் ஹுசைன்,  தலைவர்,  வகவம்

சமுதாயம் சீர் பெறவே வேண்டும் என்ற
சிந்தனையை வைத்திருக்கும்
சட்டத்தரணி
அமுதான இலக்கியத்தைக் கூட கையில்
ஏந்தியதால் புகழ்பெறுவார் இந்தத் தரணி
நிமிராதோ வளைந்திருக்கும்
மனித உள்ளம்
என்று நிதம் எண்ணுவதால் வருவார் பவனி
தமிழாலே துணை நிற்கும் கவிதை நெஞ்சே
வட்டத்தில் சட்டமிடும் இவரை கவனி

வேலைப் பளு எனும் சுமைக்குள்
மூழ்கி இவரும்
வேகமென வேஇயங்கி வந்த போதும்
வேளை வரும் போதெல்லாம்
தாளை எடுத்து
தமிழ் வடித்தார் வடித்தவைகள்
நெஞ்சம் கவரும்
தன்னையுமே வகவத்தோடிணைத்து இங்கே
கவிதைக்காய் குரல் கொடுக்க
வந்தார் இவரும்

சட்டத்தரணி ரஷீத் எம்
இம்தியாஸ் -  இன்று
வகவ கவியரங்கு உங்களிடம்

பெறுங்கள் சபாஷ்
எங்கள் கவிஞர்கள் கவிதைக்கு
அணியும் சேர்த்து
காட்டிடுங்கள் இன்று நீங்கள்
இங்கே பிக்போஸ் !