எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 31 டிசம்பர், 2015

Islamic Song written by N. Najmul Hussain








அல்லாஹ்வின் பாதையிலே அழைத்தே வந்தாய்
அல்லல்களை களையும்வழியும் சொல்லித் தந்தாய்
பொல்லாத தீங்கெல்லாம் போக்கியே நின்றாய் - ரமழானே
பெருமையுடன் விடையும் பெற்றாய்


எத்தனையோ பாவத்திலே மூழ்கிக் கிடந்தோம்
எம்மை நாம் மறந்தே மயங்கி இருந்தோம்
நித்திரையை கலைத்தே விழிக்கவும் செய்தாய்
நிம்மதியை மறுமையிலே கிடைக்கச் செய்தாய்
சொத்தான ரமழானே எங்கள் வாழ்க்கை
சொர்க்கத்தில் தொடர்வதற்கு வழி நீ அமைத்தாய்                               

(அல்லாஹ்வின் பாதையிலே..)


எங்களையே மறைவழியில் வைத்தே நின்றோம்
எம்மோடு ஈமானை சுமந்தே கொண்டோம்
தங்காத செல்வத்தை மகிழ்ந்தே தந்தோம்
தாரணியில் வறுமையினை குறைத்தே வைத்தோம்                             
சங்கைமிகு ரமழானே உன்னால் நாங்கள்
சத்தியத்தை உண்மையிலே உணர்ந்தே வென்றோம்    

(அல்லாஹ்வின் பாதையிலே)




-              என். நஜ்முல் ஹுசைன்

திங்கள், 30 நவம்பர், 2015

கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம்



வலம்புரி கவிதா வட்டத்தின் 22வது கவியரங்கு 25/11/2015 அன்று இடம்பெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு கவிஞரும் இசைக் கலைஞருமான எம்.ஏ.எம். ஆறுமுகம் அவர்களை நான் இவ்வாறு அழைத்தேன்.
                                                                                  - என். நஜ்முல் ஹுசைன் 


நாடெங்கும் இவன் பார்வை சுற்றும்
அழுகுரல்கள்
இவன் நெஞ்சைப் பற்றும்
வைப்பானே இவன் அங்கு பற்றும்
உணர்வெங்கும் கொழுந்தே தீ பற்றும்


மரபுக்குள்ளே
தானே நிற்பான்
எண்ணத்தை
பிசகின்றி வைப்பான்
தீமைகள் கண்டாலே கொதிப்பான்
அது யாராக இருந்தாலும்
எதிர்ப்பான்

போலீஸ் -
காக்கிச் சட்டையும்
அணிந்தான் - கையில்
துப்பாக்கியும் கூட கொண்டான்
இரண்டுக்கும் உள்ளே பாயும்
கவிதையை
ஆயுதம் என்றான்

கவிதை ஆயுதம் ஏந்தி - அன்றே
வகவ அரங்கினில் மிளிர்ந்தான்
நெஞ்சை நிமிர்த்தித்தான் சொன்னான்
இன்றும்
அந்த நெஞ்சோடே உள்ளான்

இசைந்தான் இன்றவன்
இசைக்கும்
எமையெல்லாம்
அசைக்கும் வரமும்தான் பெற்றான்

வெள்ளையாய் கொண்டான் அகமும்
பேச்சினில் தந்தான் சுகமும்
கொள்ளையாய் சுவைகள் ஏந்தி
கவியரங்க தலைமை ஏற்று
கவர்ந்திட வந்தான்
ஆறுமுகமும்

கவிஞா
எம். ஏ.எம். ஆறுமுகம்
இன்றுனக்கு கவியரங்க
தலைமை
கொண்டு வா மீண்டும்
எம் இளமை


புதன், 11 நவம்பர், 2015

இளநெஞ்சன் முர்ஷிதீனை இவ்வாறு அழைத்தேன்

வலம்புரி கவிதா வட்டத்தின் 21வது கவியரங்கு 27-10-2015 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமை ஏற்று நடத்துமாறு இளநெஞ்சன் முர்ஷிதீனை இவ்வாறு அழைத்தேன் - என். நஜ்முல் ஹுசைன்

மீண்டும் வகவம்
உயிர் பெறவே
தனது மூச்சைத் தந்தவனாம்


வேண்டும் வகவம்
கவிஞருக்கு
என்று
வேர்வை சிந்தி உழைத்தவனாம்

தூண்டும் கோலாய்
தானிருந்து
திறம்பட
பணியைச் செய்பவனாம்

மாண்டுப் போகக் கூடாது
முனைப்பில்
வெற்றிப் பெற்றவனாம்

அஞ்சா நெஞ்சன்
இளநெஞ்சன்
அகலப் பார்வை
பார்த்திடுவான்

ஆழம் இருக்கும்
கவி வரியில்
அகிலம் முழுதும்
பறந்திடுவான்

உலகில் அவலம் கண்டாலே
பேனா வழியால்
கொதித்தெழுவான்
துயரக் கதைகள்
சொல்லி இவன்
மேடை மீதே
கிளர்ந் தழுவான்

அவர்க்காய்
நெஞ்சை நிமிர்த்தி இவன்
கவிதை வழியால்
போர் தொடுப்பான்

போராளி இவன்
போராளி
உரிமைக்காக -
அலைகள் வீசும்
பேராழி

பிறருக்காய்
குரல் எழுப்பும்
படைப்பாளி

ஊரெல்லாம் வாழ்த்துவது
“இவன் வாழி”

எங்கள்
செயல் வீரர் செயலாளர்
இளநெஞ்சன் முர்ஷிதீன்
கவிதைகளில்
கொட்டுவது தேன்
கொட்டுவது தேள்

இளநெஞ்சன் முர்ஷிதீன்
இன்று
கவியரங்கை நடத்து
எங்கள் இதயங்களைப் பிடித்து…………

வியாழன், 1 அக்டோபர், 2015

கவிஞர் ஈழகணேஷுக்கு................

வலம்புரி கவிதா வட்டத்தின் 20வது கவியரங்கு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்கில் 27-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடாத்த கவிஞர் ஈழகணேஷுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
 

- என்.நஜ்முல் ஹுசைன்



ஆழம் நிறைந்த சொல்லுக்கு
சொந்தக்காரன்
ஆளும் இவனது வரிகள்
எங்கள் நெஞ்சின்ஓரம் - ஓர்
ஆளும் இவனது பார்வையை விட்டுச்
செல்லான் தூரம்
நாளும் சூழலைப் போற்றிப் பாடும்
பாட்டுக்காரன்


வாழும் மனித நேயன்
எங்கள் சொந்தக்காரன்
வாழும் வகவ மூச்சுக்காற்றின்
பங்குக்காரன்
சூழும் எங்கள் சிக்கல் தீர்க்கும்
கெட்டிக்காரன்
எதையும் இதமாய் எடுத்துக் கொள்ளும்
பக்குவக்காரன்

நீளும் இவனது புகழைப் பட்டியல்
போட்டுச் சொன்னால்
போதும் இனிநாம் தலைமை ஏற்க
அவனை அழைப்போம்

ஆளும் கவியே ஈழகணேஷே தலைமை ஏற்பாய்
கோலும் ஏந்தி கொள்கை நாட்டி இதயம் அமர்வாய்

ஈழகணேஷ்
இன்றுனக்கு தலைமை
மறையவை எங்கள் முதுமை


வியாழன், 17 செப்டம்பர், 2015

ஈமானிய கவசத்தோடு………..







இது
றப்பு நாடு
இங்கு உன்
றப்பு நாடு

என்று
ஆண்டுதோறும் அழைக்கின்ற
அரபு நாடு

மக்கம்
பக்கம் வைக்கிறது
சொர்க்கம்

இதயத்துக்கும்
இஹ்ராம் கட்டி
வந்தவர்களெல்லாம்
வெற்றிபெற்றோர்
வர்க்கம்

கரை புரண்டோடும்
மக்கள் வெள்ளத்தில்
கறை
கரைந்து போகிறது

தேச
எல்லைக்கோடுகள்
களைந்து

பல
வண்ணப்பூக்கள்
வெள்ளைப்பூக்களாய்

இதயங்கள் எல்லாம்
இங்கே
ஒன்றாய் வைத்து
தைக்கப்படுகின்றன

மனதுக்குள் இருக்கும்
ஷைத்தான்கள்
உதைக்கப்படுகின்றன

தக்பீர் ஒலியின்
உன்னத நாதம்
அங்கே
ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது

ஒளி
பரப்பும் ஹாஜிகள்
இனி அதை
உலக
மூலை முடுக்குகளெல்லாம்
ஒலிபரப்புச் செய்வார்கள்

உலக சவால்களை
முறியடிப்பதற்காக
மனங்கள்
பக்குவப்படுத்தப்படுகின்றன

முஸ்லிம் உம்மத்தை
துவம்சம் செய்ய
உம்மத்தம் பிடித்து
அழைவோரே

விலகிப் போங்கள்

ஈமானிய கவசம் அணிந்து
ஹாஜிகள்
புறப்பட்டு வருகிறார்கள்

இனி இந்த உலகம்
அவர்கள் வசம்

-    என்.நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மேமன் கவி


Memon Kavi: Man of Pakistani origin makes waves as Tamil poet










29-8-2015 அன்று இடம்பெற்ற 19வது வலம்புரி கவிதா வட்ட கவியரங்கிற்கு தலைமை தாங்க இலக்கிய வித்தகர் கவிஞர் மேமன் கவிக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -

மேல்வாரியாய் எதையும்
செய்ய மாட்டான் - தன்
மேல் வாரிப் போட்டேதான்
முனைந்தே நிற்பான்
ஆழ்கடலில் மூழ்கி ஒரு
முத் தெடுக்கும்
ஆள்போலே இலக்கியத்தில்
இறங் கிடுவான்

அரிதான தகவல்களைப்
பிரித் தெடுத்து
அதற்காக மூளையையும்
பிழிந் தெடுத்து
பரிசாக கோத்தெடுத்துத்
தந்திடுவான்
அவனை
இலக்கிய
வித் தகன்; என்றால்
ஓப்பமாட்டான்

எங்கெங்கோ பரந்திருக்கும்
இலக்கியத்து
உறவுகளை
தன் உறவாய்
தான் நினைத்து
கை கோத்து
இலக்கியத்தில் சிற கடிப்பான்

நூல்களுக்குள்
தன் மனதை யேபுதைத்து
நாளும்
புதியவைகளைக் கற்று
தனை வடிப்பான்

இவன்
ஆற்றல் களாலே சிலிர்க்கும்
இந்தப் புவி
இவன்
எம் மனதை ஆட்சி செயும்
மேமன்கவி

கவிஞா மேமன்கவி
இனி -
கவியரங்கை  தலைமேலே
ஏற்றே நடத்து
எங்கள் கவிஞர்களின்
எடைகளையே
சொல் நீ நிறுத்து

எங்கள் இதயங்களை
உன் அருகே
இழுத்தே நிறுத்து

-     என். நஜ்முல் {சைன்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

மா மேதை அப்துல் கலாம்



ஓர்
ஒப்பாரிப் பாட
வரவில்லை

உங்களை
ஒப்பிட்டுப் பார்க்க
வந்தேன்

அப்துல் கலாம்
அவர்களே

இந்தியாவுக்கே
உப்பிட்ட உங்களை
ஒப்பிட்டுப் பார்க்க
வந்தேன்

அவன் அள்ளி வழங்கிய
பாரி
நீங்களோ மக்களுக்காய்
எல்லாவற்றையும் வைத்துவிட்டு
கொஞ்சமாய்
கிள்ளி எடுத்த
பாரி

அவர்கள்
அணு அணுவாய்
அனுபவித்தார்கள்

நீங்கள்
அணுவைத்தானே
அனுபவித்தீர்கள்

நீங்கள்
ஜனாதிபதியாய் வாழ்ந்திருக்கிறீர்கள்

4.
பலர்
செத்துப் போயிருக்கிறார்கள்

இந்தியாவுக்கே
குடைப் பிடித்த நீங்கள்
கிழிந்த குடை தைக்கும்

சகோதரருக்காய்
ஒரு
கடை கூட திறக்காமல்....

ஆப்பிரகாம் லிங்கன்
ஜனநாயகத்துக்கு
வரைவிலக்கணம்
சொல்லப்போய்
வார்த்தைகளை
வீணாக்கியுள்ளார்

'மக்களின்
மக்களால்
மக்களுக்காக'  என்று

உங்களைக் கண்டிருந்தால்
அது
அப்துல் கலாம் என்றிருப்பார்

அப்துல் கலாமே
உங்களோடு ஒப்பிடுவதற்கு
உங்கள் அருகில் கூட
ஒருவருமில்லையே

அதனால் நான்
ஒப்பிட்டுப் பார்க்க வரவில்லை

உங்களுக்கில்லா
ஒப்பாரி யாருக்கென்று
ஒப்பாரிப் பாடத்தான்
வந்தேன்

சனி, 18 ஜூலை, 2015


வசந்தம் எப்.எம். வானொலி நோன்புப் பெருநாள் தினமான 18-07-2015 அன்று காலை 8.30 க்கு எனது குரலில் ஒலிபரப்பிய கவிதை







தூசு தட்டி
துப்பரவாக்கி வைத்திருந்தோம்
எங்கள் மனங்களை
ரமழானே
நீ வந்து எங்கள் இதயங்களில்
இபாதத் செய்யவேண்டும்
என்பதற்காய்

நீ வந்தாய்
ரமழானே நீ வந்தாய்

பாவிகளாய் இருந்த நாங்கள்
ஞானிகள் ஆனோம்

கல்லாய் இருந்த எங்களை
வைரக்
கல்லாய் ஜொலிக்கச் செய்தாய்
என்று
பெருமை கொண்டோம்

சொர்க்கத்தின் வாரிசுகளாய்
எங்கள் பெயர்களையும்
எழுதிச் சென்றாய்
என்று

இறுமாப்புக் கொண்டோம்

எங்கள் கால்களை
ஷவ்வாலிடம்
ஒப்படைத்துவிட்டுச் சென்றாயே
ரமழானே

ரமழானை
அனுபவித்த சுகந்தத்தில்
இன்று
ஈதுப் பெருநாள் கொண்டாடுகிறோம்

ஈதுப் பெருநாள்
நாம் கொண்டாட
இது பெருநாளா என்று
திண்டாடும் ஒரு கூட்டம்

ரமழானில் நாம்
தின்பதற்கான வயிறுகளைக்
கட்டிப்போட்டோம்

இந்த
ஷவ்வால் பெருநாளிலும்
தின்பதற்கான வயிறுகளைத்
திறக்க முடியாது
ஒரு கூட்டம்

சொர்க்கத்தில்
எங்கள் பெயர்களும் இருக்கிறதா

உறுதிப்படுத்திக் கொள்ள
அந்த
ஏழைகளின் வயிறுகளைப் பாருங்கள்

அந்த வயிறுகளும்
நிரம்பிய பின்புதானே
ரமழான் எங்கள் இபாதத்களை
சொர்க்கத்தில் ஒப்படைக்க
தூக்கிச் செல்லும்

ஈதுப் பெருநாள்
இது உங்களுக்கும் பெருநாள்தான் என
ஏழைகளிடம்
பிரகடனப்படுத்துங்கள்

ஷவ்வால் தன்
செவ் வாய்த்திறந்து
கூறும்
நாங்கள்
சொர்க்கத்தின் சொந்தக்காரர்கள்
என்று !

ஈத் முபாரக்

-    என். நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 31 மார்ச், 2015





free website counter

புதன், 25 மார்ச், 2015

இஸ்லாமிய கீதம் - இயற்றியவர் : என். நஜ்முல் ஹுசைன். பாடியவர்: ஈழத்து இசை முரசு கலைக்கமல்
https://www.filepicker.io/api/file/mVqhhhRKa1edcCdFAxRw

வியாழன், 12 மார்ச், 2015

Map IP Address
Powered byIP2Location.com

சனி, 7 மார்ச், 2015



இலங்கையில் கைபேசி மொபைல்கள் வந்த ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட கவிதை. (15-2-1994) அப்போதுள்ள மொபைல்போன்களுக்கு நீட்டிக் கொண்டு ஏரியல்கள் இருந்தன. அத்தோடு வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் அறவிடப்பட்டன.

தொலைபேசி குழந்தை

 

-    என் நஜ்முல் ஹுசைன்

தொலைபேசி அன்னைக்கு
இங்கும் ஒரு
பிரசவம் நடந்துள்ளது

அமைதியாய்
ஆயிரம் முட்டைகள்

முத்தமிட்டால் மட்டுமே
காசு கேட்டாள்
அன்னை

காதை வைத்தாலும்
காசு கேட்கும்                         
குழந்தை

ஓற்றைக்கொம்பு
குழந்தை
தொப்புள்கொடி
அறுத்துக் கொண்டு

அதனால்
செல்லும் இடங்களுக்கெல்லாம்
தூக்கிச் சென்று
கொஞ்சி மகிழும்
நாங்கள் -
இப்போது எங்களுக்கும்
கொம்பு முளைத்திருக்கிறது