எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 11 டிசம்பர், 2017

கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா



03-12-2017 அன்று இடம்பெற்ற 44வது வகவ கவியரங்கத்தை தலைமையேற்று நடாத்த கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்-
                                                     என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்

பல மைல்கள் இவர் தாண்டி வந்தார் - வகவம்
தன் மைல் கல் என நம்பி
வந்தார்
பலம் கவிதை என்ற உணர்வினாலே - எமை
உறவென்றே இவர் ஏற்றுக் கொண்டார்

அழகான கவி வரிகள் தருவார் -
அதில் ஆழம் போய்
முத்தெடுத்து எமை மயக்கி
வெல்வார்
அழகான பெண்ணுக்குள் இருக்கும்
சோகத்தை கவியாக்கி
கயமையையும்    கொல்வார்

வகவத்தை புகுந்த வீடாக்கி
புள காங்கிதம் கொண்ட
கவிதா யினி இவரை
வரவேற்று நாம் மகிழ்ந்தோமே
இன்று
கவியரங்க தலைமையை தான்
தந்தோமே

கவிதாயினி !
சுதர்ஸனி பொன்னையா எனும்
தையலே
தைத்திடு எம்மை நீ
உன் கவிதையால் இன்று

அது எம் மனதுக்குள் சென்று
தைத்திட வேண்டும்
கிழிந்த எம் மனங்களை
ஒன்றாக்கி
தைத்திடவும்  வேண்டும்

சுதர்ஸனி
நீ இனி
கவிதையால் இனி !

சனி, 9 டிசம்பர், 2017

"நேற்று, இன்று, நாளை " நேத்ரா மீலாத் கவியரங்கில்


கடந்த 01-12-2017 வெள்ளிக்கிழமை மாலை 5.15 க்கு நேத்ரா தொலைக்காட்சியில் மீலாத் விசேட நிகழ்ச்சியில் ஒளிபரப்பான "நேற்று, இன்று, நாளை " என்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை. தமிழ்த்தென்றல் அலி அக்பர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் என்னோடு கவிஞர்கள் கம்மல்துறை இக்பால் மற்றும் மன்னூரான் சிஹார் ஆகியோரும் பங்கு கொண்டனர்.
- என். நஜ்முல் ஹுசைன்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

(நேற்று)

உயிரினும் மேலாம்
எங்கள் அண்ணல் நபி
நினைவேந்தி நடக்கின்ற
கவியரங்கு
நேத்ரா நேயமுடன்
அழைத்ததனால் நாமிங்கு
தமிழ்த்தென்றல் அலி அக்பர்
தலைமையிலே தமிழெடுத்தோம்
தூயோன் தூதரே
உங்கள் புகழ் பாட
புகழ் பாட

சேர்ந்து ஸலவாத்துச் சொல்ல
காத்திருக்கும் சொந்தங்களே
நாவுக்கு மட்டுமல்ல நாளைய
வாழ்வுக்கும் வளம் சேர்க்க
பார்த்திருக்கும்
நெஞ்சங்களே
அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு
ராக் குகையிலிருந்துதானே
எங்கள் அண்ணல் நபி
இந்த உலகுக்கு
பகலைத் தந்தார்கள்

அந்த ஹிராக் குகையிலிருந்துதானே
எங்கள் அண்ணல் நபி
இந்த உலகுக்கு
பகலைத் தந்தார்கள்

இன்னல் அவர்கள் வாழ்வில்
பின்னல் போட்ட போதும்
கன்னலாய்தானே
அதனை ஏற்றுக் கொண்டார்கள்
அது
உம்மத் எமக்காகத்தானே

வல்லான் அல்லாஹ்
சொர்க்கத்துக்குச் செல்ல
அண்ணல் நபியவர்களுக்கு
செங்கம்பளம் விரித்து வைத்திருக்கிறான்
தாயிப் நகரமோ
அண்ணல் நபியின் இரத்தத்தால்தானே
கம்பளம் விரித்தது -
நபியின் கோரிக்கைகளுக்கெதிராய்
கைகள் விரித்தது

கொடுமை கோபுரம் தொட்டது
வானவர்களின் நெஞ்சை சுட்டது
என்றாலும்
கோபம் கோமான் நபியை
நெருங்கிட பயந்தது

பொறுமை பல தீமைகளை
மட்டுமல்ல
பல “தீ “ களையும்
தடுக்கும் ஆற்றல் பெற்றது
என்று நேற்றே சொல்லித் தந்தீர்கள்

நாங்கள் உங்கள் வழி
நடக்கிறோம் என்று
அடிக்கடி வழுக்கி விழுகிறோம்

எங்கள் உம்மத்துகளை
பலருக்கு
விழுங்க விடுகிறோம்

அண்ணலே யாரஸூலே
நீங்கள் நேற்று
வரலாறு படைத்தபோது
உங்கள் சஹாபா விழுதுகள்
பல தரைகளில் விதைக்கப்பட்டார்கள்-
எங்கள் மண்ணிலும்

அந்த உறுதிப்பத்திரத்தை
காணாமலாக்கிவிட்டு
தலை குனிந்து நிற்கிறோம்
என்றாலும்
அண்ணலே யாரஸூலே
உங்களது நேற்றைதானே
நாங்கள் திரும்பத் திரும்ப
படிக்கிறோம்

எமது இன்றைய வெற்றியும்
நாளைய வெற்றியும்
அங்கேதானிருக்கிறது
என்று தெரிந்து கொண்டதால்
……………………………………..

(இன்று)
எங்கள் வாழ்க்கையெல்லாம்
எங்களோடு
பயணித்துக் கொண்டிருக்கும்
யார ஸூலே
அடிக்கடி நாம்
உங்கள் ஒட்டகத்திலிருந்து
இறங்கிப் போய் விடுகிறோம்

எங்கள் அகத்திலிருந்து
உங்களை
இறக்கி வைத்துவிடுகிறோம்
அதனால்
எங்களை நாங்கள்
அழுக்காக்கிக் கொண்டு

ஏந்தல் நபியே
உங்களை ஏந்திய
மனங்களுக்குத்தர்னே
மணக்கும் மகிமை இருக்கிறது
என்பதை
அடிக்கடி மறந்து போகிறோம்

நீங்கள் எங்களுக்கு
ஒரேயொரு பெயர் வைத்தீர்கள்
ஆனால்
இப்போது எங்களுக்கு
பல பெயர்கள்

எங்களுக்கென்று பல
நாடுகள்
நாங்கள்தான்
எந்த நாட்டிலுமில்லை

வரலாறு படைத்த நாம்
வரலாற்றுப் பாடங்களில்
சித்தியடைய முடியாமல்
இன்று

எமது கழுத்தை
நாமே அறுக்க
துடித்துக் கொண்டிருக்கிறோம்

ஒற்றுமை உங்களுடன் வாழ்ந்தது
இங்கே உனக்கு இடமில்லை
என்று நாங்களோ அதை
விரட்டிக் கொண்டிருக்கிறோம்

எங்கள் உறவுகள்
அகதிகளாய்
ஓடித் திரிகிறார்கள்
செல்வம் எங்களிடம்
குவிந்து கிடந்தாலும்
மன்னித்துக் கொள்ளுங்கள்
அந்த அழுகுரல்களுக்கு
காது கொடுக்க முடியாமல்
மேலை நாட்டு “இயர் போன்”
எங்கள் காதுகளில் மாட்டப்பட்டுள்ளது

பலம் எங்களிடமிருக்கிறது
அதனைக் கண்டு
அகதிகளை விரட்டியடிப்போர்
கிஞ்சித்தும் அஞ்சமாட்டார்கள்
அதை எப்போதுமே
நாம் காட்டமாட்டோம்
என்று தெரிந்ததால்

இஸ்லாம் எங்களோடிருக்கிறது
பாவம்
நாங்கள்தான் அதனோடு இல்லை

அண்ணலே யாரஸூலே
இதயத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டதால்
சர்வதேசமெங்கும்
நாங்கள் ஏளனப் பொருளாய்

இல்லை இல்லை
எமது இன்று
இப்படியே முடிந்து விடாது
எங்கள் கோமான் நபியே
உங்கள் மீது ஸலவாத்துச் சொல்லி
இதோ இதோ
நாங்கள்
நடக்கத் தயாராகிவிட்டோம்
உங்கள் வழி !
………………………………………..

(நாளை)
வா முஸ்லிம் உம்மத்தே
இந்த வாழ்க்கையை
அந்த வள்ளல் நபியிடம்
முழுமையாய் ஒப்படைக்க

நேற்று கரடு முரடான பாதையிலே நடந்த
அண்ணல் நபி
இன்று நன்கு செப்பனிட்ட பாதையிலே
எங்களை
கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்

காணாமல் போன ஒட்டகம்
கல்வி
உடைந்து போன எங்கள்
பெருமைகளை ஒட்ட
“கம்”GUM மும் கல்விதான்
என்று
எங்கள் சந்ததிகளுக்குச்
சொல்லிக் கொடுப்போம்

வெறும் கல்விமான்களாய்
மாத்திரமல்ல
பட்டங்களைச் சுமந்த
ஜடங்களாய் மாத்திரமல்ல
அண்ணல் நபியே
உங்கள் அழகிய வழியின்
பொக்கிஷங்களாய்
அவர்களை மின்னச் செய்வோம் -
அவர்களை மனிதர்களாய்
மிளிரச் செய்வோம்

விட்டுக் கொடுப்பதும்
சேர்ந்து வாழ்வதும்
இஸ்லாம்தான்
என்று புரிய வைப்போம்
அனைவரும் ஆதமின் மக்கள்
என்று வேதம் சொன்னதை
சிந்தையில் ஏற்றுவோம்

சினம் இனம் அழிக்கும்
என்று உணரச் செய்வோம்
பொறுமையை பெருமை ஆடையாய்
அணிந்த பூமான் நபியே
எங்கள் உம்மத்திற்கு
அதை
பொன்னாடையாய் போர்த்திவைப்போம்

எல்லார் கைகளுமே
பற்றிப் பிடித்தால்
ஒற்றுமையின் கயிற்றை
யாருக்கு தைரியம் வரும்
அதில் போட ஓட்டை

சர்வதேசமெங்கும்
சர்வதேசமெங்கும்
இஸ்லாம் சிம்மாசனம் போட்டு அமர
முஸ்லிம் உம்மத்தை
உங்கள் இதயாசனத்தில்
அமரச் செய்வோம்

குண்டு வைக்க வந்தவனல்ல
இவன்
மானிடர்க்கு தொண்டு செய்ய வந்தவன்
என்று உலகோர்
உணர்ந்து கொள்ள வழி சமைப்போம்

எங்கள் உடைகளுக்குள்
புதைந்திருக்கும் மனிதத்தை
பாரெங்கும் பறை சாற்றுவோம்

மரியாதைக்குரியவர்கள் இவர்கள்
என்ற
அடைமொழிக்கு
சொந்தக்காரர்களாவோம்

அண்ணலே யாரஸூலே
இதோ
எங்கள் நாளைய தினத்தை
உங்கள் பாதையிலே
ஒப்படைக்கிறோம்
நாளைய மஹ்ஷரிலே
நாங்கள்
சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்
என்று
ஒப்பமிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் !

ஸல்லல்லா ஹு அலா முஹம்மத்
ஸல்லல்லா ஹு அலைவஸல்லம்!

செவ்வாய், 7 நவம்பர், 2017

கவிஞர் வாழைத்தோட்டம் எம் வஸீர்

வலம்புரி கவிதா வட்டத்தின் 43 வது கவியரங்கு  3-11-2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் வாழைத்தோட்டம் எம் வஸீருக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -
என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்.

அன்று முதல் எம்மோடு வந்தான்
இவன்
தன் ஆற்றல் தனைக் காட்டி
எம் நெஞ்சை வென்றான்
திறக்காதா வகவத்தின் கதவு
மீண்டும்
என்றிவனும் ஏங்கித்தான் எம்மைப்போல் தவித்தான்

கவிதை யையே உள்ளமெல்லாம்
வைத்தான்
காண்கின்ற பொருளையெல்லாம்
கவித்துவமாய் பார்த்தான்
கடினமென நினைக்காமல்
மரபை
நண்பரிடம் ஆவலுடன் ஆசையுடன் கற்றான்

வாழைத் தோட்டத்து மைந்தன்
வாஞ்சையுடன் வகவத்தை யே மதிக்கும் கவிஞன்
வேலை பல பொறுப்புடனே
இருந்தும்
வகவமென்றால் வேட்கையுட னே
வருவான் என்றும்

வாழைத்தோட்டத்து வஸீர்தான்
தலைமை யினை தானேற்க
வந்ததுவே குஷிதான் - கவிதை
மாலையோடு வருகின்ற
கவிஞர்
தம்மோடு தான் சேர்த்து
மறக்க வைப்பான் பசிதான்

கவிஞர் எம். வஸீர்
கவியரங்கு உங்களிடம்
காட்டிடுங்கள் உங்கள் இடம்!



திங்கள், 6 நவம்பர், 2017

RAINY DAYS AND LIMPING LEGS

5-11-2017 அன்று "SUNDAY OBSERVER " பத்திரிகையில் இடம்பெற்ற எனது ஆங்கிலக் கவிதை




ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி கவியரங்கு - "கை"

வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி தனது 60ம் ஆண்டு வைர விழா நிகழ்வுகளுக்காக 28-5-2005 இரவு 10 மணிக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கவியரங்கொன்றை ஏற்பாடு
செய்திருந்தது. 



தலைமை : கலாபூஷணம் கலைவாதி கலீல்

கவிஞர்களும் தலைப்புகளும்

கிண்ணியா அமீர் அலி - நாசி
காத்தான்குடி பௌஸ் - வாய்
ரவூப் ஹசீர் - கண்
மேமன்கவி - காது
நஜ்முல் ஹுசைன் - கை


"கை" என்ற தலைப்பில் நான் பாடிய கவிதை -
என். நஜ்முல் ஹுசைன்


வைரவிழா காணும்
பாபுல் ஹஸன்
அதிபர் எம். ஜே.எம். காசிம்
அவர்களே
அதிதிகளே, ஆசிரியர் குழு
உறுப்பினர்களே


கவிதையால்
தலைவாரி பூச்சூடும்
கலைவாதி கலீல் அவர்களே

அவர் எங்கள்
தலைகளை வாரும்போது
எங்கள் கால்களை வாராமல்
கை தட்டி மகிழும்
சபையோரே


இக் கல்லூரி காற்றினிலே
சுவாசித்து
இன்று தலைநகரிலே
தென்றலாய் பவனி வரும்
தமிழ்த் தென்றல் அலி அக்பர்
அவர்களே

இங்கே இதய மண்ணிலே
விதைகள் போடுவதற்காய்
கவிதை கொண்டு வந்திருக்கும்
என் அருமை கவிஞர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்


இது நாங்கள்
கவிதை பாட
சாலை தந்த
பாடசாலை
இல்லை இல்லை
உறுப்புகள் தந்த
தான சாலை


சீறிப் பாயும்
ஹசீர் கண்
கண் கொடுத்திருக்கிறது

புவிக்காய் பாடும்
மேமன்கவிக்காய்
காது கொடுத்திருக்கிறது
அவர் கவிதைக்கு
காது கொடுக்கக் காத்திருக்கிறது


அடடா
மருத்துவத்தில் இல்லா
விசித்திரம்
வாய், நாசிகூட
கொடுத்திருக்கிறது


காத்தான்குடி பௌசிடம்
வாயைக் கொடுத்திருக்கிறது

கிண்ணியா அமீர் அலியின்
கவிதைகளை
மூக்கைக் கொடுத்து
முகர்ந்துப் பார்த்துள்ளது


இதில் என்ன விசித்திரம்
எத்தனைப் பேருக்கு
மூளை கொடுத்த கல்லூரி
வெறுமனே மூலையில் போய்
குந்தி விடாதே
சமுதாய மேடையிலே
நிமிர்ந்து நில் என்று
எத்தனைப் பேருக்கு
மூளை கொடுத்த கல்லூரி
இன்றெனக்கு
கை கொடுத்துள்ளது -
கவிதை பாட
 

இன்றெனக்கு ஒரு கை
கொடுத்துள்ளது


உங்களுக்கு
இருக்கை தந்துள்ளது


இருக்கைகளை நீங்களே
வைத்துக் கொள்ளுங்கள்

அதற்காகத்தானே
ஏலம் போல் மணக்க வேண்டிய
எம் சமுதாயம்
ஏலம் போடப்படுகிறது
அதனால் இருக்கையை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
 

இரு
கைகளை மட்டும்
எங்களுக்குத் தாருங்கள்
தட்டும் இரு கைகளை மட்டும்
எங்களுக்குத் தாருங்கள்


சபையோரே
பந்தை வீசுவது மட்டும்தான்
எங்கள் வேலை
அதை சரியாய்
பாய்ந்துப் பிடிப்பது
உங்கள் வேலை


சமுதாயமே
உனது இதயக் கையைப்
பொத்தி வைத்துக்கொண்டு
உனக்கு வேறென்ன வேலை


மனிதனை ஏற்றிவிடுவது
வேண்டுமானால்
ஏணியாய் இருக்கலாம்
என்றாலும் எம் சமூகத்தை
கை தூக்கி விடுவது
கல்விதானே
 

காலால் நீங்கள்
இமயத்தை ஏறலாம்
எனினும்
உன் கைகளால்தான்
வானத்தைப் பிடிக்கலாம் -
எழுத்து ஏணி வைத்து


வள்ளுவன்
இந்தக் கையால்
திருக்குறள் எழுதவில்லை
ஏனெனில்
இது என் கை
இருந்தாலும் உன் கையால்
ஒரு புதுக் குறள் எழுதலாம்
கல்வி உன் கைக்குள்
இருந்தால்


இங்கே எத்தனையோ விஷயங்கள்
எங்கள் கைக்கு வெளியே


சமுதாயமே நீ
மறக்காதே
எழுவாய் இலையேல்
வாக்கியம் இல்லை
கல்வியில் நீ
எழுவாய் இலையேல்
உனக்கு
வாழ்க்கையும் இல்லை


இலக்கணத்தில்
அவனும், அவளும்,
அவர்களும் படர்க்கை
என்றாலும்
அவர்கள் இல்லாமல்
ஏதுனக்கு வாழ்க்கை


கல்வி - ஒற்றுமை இரண்டும்
இருக்க வேண்டியது
உன் கை
இருந்தால் இந்த உலகுக்கே
தருவாய் விளக்கை
வாழ்க்கை உனக்குத் தரப்பட்ட
வலக்கை
நீ அதில் காட்டப்போவது
உதயமாகும் கிழக்கையா ?
அஸ்தமிக்கும் மேற்கையா ?
தீர்மானம் இருக்கிறது
உன் கை


கை கொடுத்த கடல் கூட
ஒரு நாள் கை விரித்தது
அந்தச் சந்தோசத்தில்
பலர்
கை சுருட்டிக் கொண்டார்கள் -
கிடைத்ததையெல்லாம்
சுருட்டிக் கொண்டார்கள்

அகதிகளுக்கு வந்ததை
அதிதிகளுக்கு வந்ததாய்
நினைத்துக் கொண்டார்கள்
 

இல்லை இல்லை
அதிதிகளாய் இருக்கும்
நாங்கள்
நாளை அகதிகளாய்
போய் விடுவோமோ
என்று பயந்து
கிடைத்த பொருட்களை
எடுத்து வைத்து
ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்கள்


சமுதாயம் இவர்களுக்கு
என்ன கைம்மாறு
செய்யப்போகிறது ?


அமெரிக்காவைப் போல்
இங்கே சிலர் வைத்திருப்பது
உலகை அழிக்கும் உலக்கை
என்றாலும் பாசாங்காய்
நீட்டுவது கருணைக்கை
அவர்களுக்கெல்லாம்
எப்படியாவது அடையவேண்டும்
தம் இலக்கை
யாரிடம் போய் சொல்லுவது
இவர்கள் வழக்கை


கைக்கும் இந்த வாழ்க்கை
இனிக்கும் நாள் எப்போது ?
எங்கள் கைக்குள்
சட்டத்தரணிகளாய் மிளிரும்
இளைய சமுதாயம்
இந்த வழக்கை
ஏற்றுக் கொள்ளும்போது


இளைய சமுதாயமே -
நம்பிக்கை வைத்துள்ளது
உடுக்கை இழந்த சமுதாய
இடுக்கண் களைய
உன் கை தருவாய்
என்று நம்பி
கை வைத்துள்ளது எம் சமூகம்


இலட்சியங்களை நீ
கைகளால் கைது செய்து
உன் கைகள்
வெறும் பொய்கள் அல்ல
இந்த உலகத்தைப் புரட்டும்
நெம்புகோலைத் தூக்கும்
வலிமை
உன் கைகளுக்குத்தான் உண்டு


வெறுமனே சத்தியம்
செய்வதற்காய் அல்ல
உன் கைகள்
சத்தியம் காப்பதற்காய்


நாளை என்ற நாளை
உன்னால்தான்
அடையாளம் காண முடியும்
சின்னஞ்சிறு வித்தியாசங்களுக்கிடையே
சறுகிப் போய் விடாதே
நீ பென்னம்பெரு
காரியங்களுக்காய்
உருவாகியுள்ளவன்


ஊசியின் கைகளில்
வழங்கப்படும் நூலைப் படித்து
மானத்தைப் பாதுகாக்க
பிரிந்திருக்கும் ஆடைகளை
ஒற்றுமையாக்குவதில்லையா -
அதுதான் உன் கைகளிலும்
தரப்பட்டிருக்கும் பணி


எது கை என்று
என்னிடம் கேட்டார்கள்
எதுகை இல்லாமல் சொன்னேன்
இது கை என்று -


இளைய சமுதாயமே
 

அது
உன் கை
உன் கை
உன் கை
 

நன்றி!

வெள்ளி, 6 அக்டோபர், 2017

கவிதாயினி யோகராஜன் சுசீலா




வலம்புரி கவிதா வட்டத்தின் (வகவம்) 42வது கவியரங்கு 05-10-2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமைத் தாங்கி நடாத்த கவிதாயினி யோகராஜன் சுசீலாவுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என் நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்



 
புலிபோலே பாய்ந்து வரும் பெண்ணாள் - இவள்
பொங்கிடுவாள் கொடுமைகள் முன்னால்
வலி மிகுந்தாள் பெண்கள் வலி
கண்டால்
வார்த்தைகளால் சுட்டெரித்துக்
கொல்வாள்
வரிகளிலே ஏந்திய இவள்
சொல் வாள் 

இல்லை இவள் கவிதையிலே வேஷம்
இதயத்தைப் பிழிந்திடுவாள் ;
பேசும்
சொல்லுக்குள்ளே பொங்கும்
ரோஷம்
சோர்வில்லாள்; இவள் முன்னே 
எம் கவிதை கூசும்

உளவியலைப் பொருட்டாக கொண்டாள்
உலவுகின்ற மனத்துயரை
தீர்க்கும்
உறுதியினை தலைமேலே
வைத்தாள்
உம்மத்தம் செய்து திரிவோரை
அச்சமின்றி வெளிப்படையாய்
வைதாள் 

வகவத் திற்கிவள் வந்தாள்
மயிலா
தோகை விரித்தாடுகின்ற
குயிலா
வாகை சூடும் இவள்
வை சுசீலா
உன் தலைமையிலே சிறப்பை
வை சுசீலா 

யோகராஜன் சுசீலாவின்
தலைமை
காட்டிடுவாள் கவிதையிலே
இளமை
தொட்டிடுவோம் இவள்
கொட்டும் உளமை
வகவத்திற் கிவள் வருகை
பெருமை!

புதன், 20 செப்டம்பர், 2017

கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ்

வலம்புரி கவிதா வட்டத்தின் 41 வது கவியரங்கம் 05/09/2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்
- என் நஜ்முல் ஹுசைன்,  தலைவர்,  வகவம்

சமுதாயம் சீர் பெறவே வேண்டும் என்ற
சிந்தனையை வைத்திருக்கும்
சட்டத்தரணி
அமுதான இலக்கியத்தைக் கூட கையில்
ஏந்தியதால் புகழ்பெறுவார் இந்தத் தரணி
நிமிராதோ வளைந்திருக்கும்
மனித உள்ளம்
என்று நிதம் எண்ணுவதால் வருவார் பவனி
தமிழாலே துணை நிற்கும் கவிதை நெஞ்சே
வட்டத்தில் சட்டமிடும் இவரை கவனி

வேலைப் பளு எனும் சுமைக்குள்
மூழ்கி இவரும்
வேகமென வேஇயங்கி வந்த போதும்
வேளை வரும் போதெல்லாம்
தாளை எடுத்து
தமிழ் வடித்தார் வடித்தவைகள்
நெஞ்சம் கவரும்
தன்னையுமே வகவத்தோடிணைத்து இங்கே
கவிதைக்காய் குரல் கொடுக்க
வந்தார் இவரும்

சட்டத்தரணி ரஷீத் எம்
இம்தியாஸ் -  இன்று
வகவ கவியரங்கு உங்களிடம்

பெறுங்கள் சபாஷ்
எங்கள் கவிஞர்கள் கவிதைக்கு
அணியும் சேர்த்து
காட்டிடுங்கள் இன்று நீங்கள்
இங்கே பிக்போஸ் !



திங்கள், 28 ஆகஸ்ட், 2017

சிறுகதை - " இப்படி செஞ்சிட்டீங்களே...............!"

இன்று 25/8/2017 வெள்ளிக்கிழமை "விடிவெள்ளி" பத்திரிகையில் இடம்பெற்ற எனது சிறுகதை

இப்படி செஞ்சிட்டீங்களே...............!
 

                                                                  என். நஜ்முல் ஹுசைன்

ஸ்ரியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். தனது தாய் இப்படி செய்வாள் என்றும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..இப்போது அவர் வந்து விடுவார்.

அதற்குள் இதனை சரி செய்ய முடியுமா? முடியாது என்று நஸ்ரியாவுக்குத் தெரியும்.

'என்ன உம்மா இப்படி செஞ்சிட்டீங்க ?' வேதனை கலந்த கோபத்தோடு நஸ்ரியா கேட்டாள். தாய் பேந்த பேந்த விழித்தாள்.

'சரி சரி கொஞ்சம் சீக்கிரமாக எறங்கி வாங்க.....' என்று கூறியவாறே தனது தாயை கைத்தாங்கலாகப் பிடித்தாள். அவளைப் பிடித்தவாறே குளியலறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவளது தாய் நடுங்கியவாறு அவள் இழுத்த இழுப்புக்குச் சென்றாள். அப்படி போய்க்கொண்டிருக்கும் போதே அன்வர் வந்து விட்டான்.
களைப்போடும், அலுப்போடும் அவன் இருந்தது அவனது முகத்திலேயே தெரிந்தது.

'நஸ்ரியா இன்னக்கி ஒபீஸ்ல சரியான வேல. எனக்கு கொஞ்சம் டீ தாங்க' என்று சொல்லிக் கொண்டே அவர்களது அறைக்குள் போனான்.
நஸ்ரியாவுக்கு ஒரு நாளும் ஏற்படாத ஒரு நடுக்கம் ஏற்பட்டது. தனது கணவர் பெரிய கோபக்காரர் அல்ல என்றாலும் கோபப்படாதவரும் அல்ல என்பது அவளுக்கு நன்கு தெரியும்.

நஸ்ரியாவுக்கு திருமணம் முடிந்து எட்டு மாதங்கள்தான் ஆகின்றன. தந்தை இல்லை. அவளது ஒரே சகோதரன் பாரூக் கஷ்டப்பட்டு நஸ்ரியாவுக்கு திருமணம் முடித்து வைத்தான். அன்வரோடு நஸ்ரியா தனிக்குடித்தனம் வந்து விட்டாள்.

கஷ்டப்பட்டு செய்து வைத்ததால் நஸ்ரியாவின் குடும்ப வாழ்வில் சுமையாகிப் போகக்கூடாது என்பதற்காக வயதான தனது தாயை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான் பாரூக்.

தனது மகளைப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று தாய் விடுத்த வேண்டுகோளை ஏற்று நஸ்ரியாவின் வீட்டுக்கு அழைத்து வந்தான் பாரூக். தாயை கண்டதும் நஸ்ரியா கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவள் அவளது தாயின் மேல் உயிரையே வைத்திருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட காரணத்தால் எப்போதுமே தாயின் நிழல் போலத்தான் நஸ்ரியா இருப்பாள்.

அவளது திருமண வாழ்க்கை தாயாரிடமிருந்து அவளைத் தூரமாக்கியது.
அதுதான் தாயைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் .

'நானா ரெண்டு நாளைக்காவது உம்மாவ என்கிட்ட உட்டுட்டுப் போங்க. எனக்கு ஆசையா இருக்கு' என்றாள்.

'வேண்டாம்மா இப்ப அவங்கள பாக்கிறது ஒங்களுக்கு கஷ்டம்' என்று அவளது சகோதரன் கூறியும் நஸ்ரியாவின் பிடிவாதத்தால் விட்டுவிட்டுப் போனான்.
நாநா சொன்னது போல பெரிய கஷ்டம் ஒன்றும் இருக்கவில்லை. அவர்களது பாட்டில் சாப்பிட்டு விட்டு தூங்குவார்கள். முன்பு போல பேச்சு இல்லை. சில நேரம் மலசலகூடத்துக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும். இன்று பகல் சாப்பாட்டுக்குப் பிறகு தள்ளாடி தள்ளாடி நஸ்ரியாவின் அறைக்கு வந்தார். மெதுமெதுவாக பழைய கதைகளைப் பேச ஆரம்பித்தார். நஸ்ரியாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளும் சில விஷயங்களை நினைவுப்படுத்தி பேசிக்கொண்டிருந்தாள். அவர்களது பேச்சு வார்த்தை நடந்தது நஸ்ரியாவின் கட்டிலின் மேல். பேசிக் கொண்டிருந்தவாறே தாயார் தூங்கிப் போனார். பரவாயில்லை கொஞ்சம் தூங்கட்டும் என நஸ்ரியா தனது வேலைகளை கவனிக்கப் போனாள்.

தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறைப் பக்கம் வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறைக்குள் வித்தியாசமான வாசம். நஸ்ரியா மூக்கை உறிஞ்சினாள். அது வாசமல்ல் துர்நாற்றம். பதறிக்கொண்டு பார்த்தாள். அவளது உம்மா கட்டிலை அசுத்தப்படுத்தியிருந்தாள். அவளது நாநா சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் நஸ்ரியாவுக்குப் புரிந்தது.
வயதானவள்; தன் உணர்விழந்திருந்தாள். முதன்முறையாக அவள் தனது தாயின் மீது கோபப்பட்டாள். இப்போது அவர் வரும் நேரம். இதையெல்லாம் கழுவி காயவைக்க முடியாது. படுக்கையை எதுவும் செய்யவும் முடியாது.

'நஸ்ரியா' அவளது கணவன் முதன் முதலாக கத்தினான். உம்மா செய்த காரியத்தால் எனக்கே கோபம் வந்ததே. அவருக்கு வராமல் இருக்குமா. என்ன சொல்லி சமாளிக்கப் போறன் என்று யோசித்துக் கொண்டே உம்மாவை ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு அறைக்கு ஓடினாள்.

இப்போதுதான் அவளது உம்மாவுக்கு சரியான நினைவு வந்திருந்தது. தான் விட்ட பிழை அவளுக்குத் தெரிந்தது. அவள் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. என்ன செய்ய அவளது கட்டுப்பாட்டை அவள் இழந்து விட்டாள்.

அறைக்குள் ஓடிய நஸ்ரியாவுக்கு அவளை அறியாமலேயே சிறிய காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.

'நஸ்ரியா கூப்பிட்டது காதுல விழலையா' மறுபடி அன்வர் கத்தியபோது நஸ்ரியா உள்ளே போய்விட்டாள்.

'இல்லங்க வந்து......அவங்க. ...' தடுமாறினாள் நஸ்ரியா.
'நான் ஏன் கூப்பிட்டன் என்று தெரியாம என்ன பொலம்புறீங்க....நான் காலைல இங்க வச்சிட்டுப் போன பைல் எங்க. ...? '

நஸ்ரியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'அத நான் தான் எடுத்து வச்சேன். ..... இந்தாங்க ..' என்று வைத்த இடத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.

'அதுதானே நானும் பயந்துட்டன். இது முக்கியமான பைல்' அன்வர் இயல்பு நிலைக்கு வந்திருந்தான்.

'சரி, டீ கொண்டு வந்தீங்களா .....' என்று கேட்டுக் கொண்டே அன்வர் இப்போதுதான் நஸ்ரியாவின் முகத்தைப் பார்த்தான். அதில் வியர்வை படிந்திருந்தது. ஓர் அச்சமும் தெரிந்தது.

'என்ன நஸ்ரியா பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க. உங்களுக்கு ஒடம்பு சரியில்லையா' என்று கேட்டவாறே அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

'இல்ல.... உம்மா...' அவள் எதையோ சொல்லத் தயங்கினாள். அப்போதுதான் அன்வர் அறைக்குள் வீசிய துர்நாற்றத்தை உணர்ந்தான்.

'சொல்லுங்க நஸ்ரியா. என்ன நடந்திச்சு. என்ன நாத்தம்'
நஸ்ரியா உருக்குலைந்து போனாள். கணவனின் அந்தக் கேள்விக்கு நஸ்ரியாவால் உடனடியாக தெளிவான பதில் சொல்ல முடியவில்லை.
துண்டுத் துண்டாக எதை எதையோ சொன்னாள். தனது தாயை குற்றவாளி கூண்டில் ஏற்றுவது அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.

அவள் தெளிவாக சொல்லாவிட்டாலும் அன்வர் நடந்தது என்ன என்பதை புரிந்து கொண்டான்.

அன்வர் நஸ்ரியாவின் கைகளைப் பற்றினான்.அதிலே ஒரு பரிவு இருந்தது.

'இதுக்காகவா கவலபடுறீங்க...' அன்வரின் தொனியில் அன்பு இருந்தது.

'நஸ்ரியா எங்க உம்மா வாப்பா எங்க வீட்ட அசுத்தப்படுத்தினா, படுக்கைய அசுத்தப்படுத்தினா உண்மையிலேயே அது எங்களுக்கு பெரிய பாக்கியம்.
அவங்களுக்கு வயசு போக போக அவங்க கொழந்தய போல. நாங்க கொழந்தையா இருக்கிற நேரம் எத்தனை தடவ அவங்க மேலெல்லாம் நஜீஸாக்கியிருப்போம். படுக்கய அசுத்தமாக்கியிருப்போம். எந்த உம்மா, வாப்பாவாவது தங்கட கொழந்தய அதுக்காக ஏசியிருக்காங்களா. பதிலுக்கு வாரி அணைக்க இல்லையா. நாங்க கொஞ்சம் பெரிய புள்ள ஆன நேரத்தில கூட தெரியாம கட்டுல்ல சிறுநீர் கழிச்சிருக்கோம். எங்க உம்மா, வாப்பா அத யாருக்கும் தெரியாம கழுவி போட இல்லையா.

அந்த உம்மா, வாப்பாக்கு நாங்க எப்ப கைம்மாறு செய்றது . நாங்க எத்தன மொற செஞ்சாலும் அவங்க செஞ்சதுக்கு ஈடாகுமா .....'

அன்வர் பேசுவதை கேட்டு நஸ்ரியா பூரித்துப் போனாள்.
சாரத்தை அணிந்து கொண்ட அன்வர் பெட் சீட்டை நானே கழுவுறேன் என்று நஸ்ரியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தி எடுத்துச் சென்றான்.

தனது மகளை மருமகன் அடித்து விடுவானோ என்று பயந்து போய் வந்த நஸ்ரியாவின் தாய் அன்வரின் பேச்சைக் கேட்டு கதவருகே கதறியழுது கொண்டிருந்தாள்.
.............................................................................................................................

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கவிஞர் ஆறுமுகம்


திங்கள், 17 ஜூலை, 2017

கவிஞர் ஏ. பீர் முகம்மது

வலம்புரி கவிதா வட்டத்தின் 39 வது கவியரங்கு 8-7-2017 அன்று நடந்தபோது கவியரங்கினை தலைமையேற்று நடாத்த கவிஞர் ஏ. பீர் முகம்மது அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்


பேராற்றல் கொண்ட ஒரு
குடும்பத்தின் உறுப்பினராய்
பேர் பெற்ற ஒரு கவிஞர்
பேச்சாளர் எழுத்தாளர்
கூர் கொண்ட பேனாவின்
தேன் நாவின் சொந்தமிவர்
சீர்வரிசை யாக இவர்
வகவத் தோடொன்றிணைந்தார்
பீர்முகம்மத் பெற்றதினை
எங்களுக்குப் பெருமை என்பேன்


கிழக்கிலங்கை மண்ணுக்கே
உண்டான செழுமை பெற்று
முழக்கமிட்டு இலக்கியத்தில்
முத்திரையும் பதிப்பவராம்
சளைக்காத தன் பேச்சில்
சுவையூட்டி மனங்கவரும்
வித்தகராம்
கலைக்காக மட்டுமல்ல கல்விக்கும் இவர் சேவை
கல்வி
அதிகாரியாய் இருந்து
காட்டிய இவர் திறமை
மாணவர்
மனங்களெல்லாம் மணக்குதம்மா


கவிதை வெள்ளம் பாய்கிறது
வகவத்தில் என்றறிந்து
நனைவதற்கு இவர் வந்தார்
உங்கள் கவிதையிலே நனைவதற்கு
நாமுள்ளோம் என்றுரைத்து
கவிதை
தலைமையினை இன்று
தந்தோம்
கவிஞரே பீர்முகம்மது
ஊற்றுங்கள் எங்கள் காதுகளில்
உங்கள் அக மது
எங்கள் அகமது வைப்போம்
உங்கள் பேர் முகமது

   - என். நஜ்முல் ஹுசைன்


வியாழன், 6 ஜூலை, 2017

கழுதைகளிடம் ஏன் கற்பூரம்?



மனது வலிக்கிறது
பாடப் புத்தகங்களைக் கிழித்து
கை துடைக்க
தரும்போது

அறிவூட்டிய
ஒரு தாயல்லவா
கழுத்து நெறித்து
கொல்லப்படுகிறாள்

இன்னும்
பல பிள்ளைகளைப்
பெற்றெடுக்கத் தகுதியானவள்

அறிவிலிகளின் கைகளில்
அகப்பட்டு
சின்னாப்
பின்னமாக்கப்படுகிறாள்

பாவத்தில் எங்களுக்கும்
பங்கு வைத்து

படித்த முட்டாள் பிள்ளைகளும்
இளந் தாயை
முதியோர் இல்லத்தில்
ஒப்படைத்து

இந்தத்  தாயை
கொலை செய்த காரணத்தால்
எத்தனை அறிஞர்கள்
கரு கலைக்கப்பட்டார்கள்

சரியாக கணக்குப் பார்த்து
பணத்தைப் பெற்ற
ஹோட்டல் முதலாளி
சொல்லிக் கொடுத்த
தாயை
காலுக்குக் கீழல்லவா
போட்டுள்ளார்

தயவுசெய்து
படித்த பாடப் புத்தகங்களை
சிறு தொகைக்காய்
சீனி சுற்ற கொடுக்காதீர்கள்

எத்தனையோ
ஏழை தேனிகளின்
தேன்
அங்கே புதைந்திருக்கும்போது

நாளைய பெரும் முதலீட்டுக்காய்
அறிஞர்களாக துடித்துக் கொண்டிருக்கும்
அந்த அப்பாவிகளிடம்
ஒப்படையுங்கள்!

- என். நஜ்முல் ஹுசைன்
05/07/2017

புதன், 31 மே, 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்


12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது.  நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
   - என். நஜ்முல் ஹுசைன்

(தொடர்ச்சி )


+++++++++++++++++
7. எஸ்.  தனபாலன்
+++++++++++++++++

ஓடையது சலசலக்கும் பாடல்
ஓயாது ஒலித்துவிடும் காதில்
வாடையது மறையாமல் இன்னும்
ஸ்ரீதர் -
வாஞ்சையது நெஞ்சத்தில்
மின்னும்

மின்னும் பாடலதன் வரிதந்த கவிஞன்
கவிஞா உனக்கு வரி செலுத்தும்
வகவம் எந்நாளும்

கவிதைமேல் காதல் இவன் கொண்டான்
வகவத்தை தன்உறவு என்றான்
மென்மேலும் சீருறவே வகவம்
துணை நிற்பேன் என்றும் இவன்
சொன்னான்
அதற்கு
எஸ் போட்ட தனபாலன் எழுக
கவிதை தரவேண்டும்
கன்னல் தேன் ஒழுக !

+++++++++++++++++++
8. க. லோகநாதன்
+++++++++++++++++++

சுவைபடவே கவிதை சொல்லும் ஒருவன்
வகவம் கலகலக்க கலக்கும் நம் கவிஞன்
இவன் எழுந்து கவிபாட முன்னே
சபையே
சிரிப்பதற்கு தயாராகி நிற்கும்

காதுகளை கூர்மையென ஆக்கி - இவன்
கருத்துகளில் மெய்மறந்து போகும்
இவன் பேச்சு வழக்கினில்தான் சொல்வான்
என்றாலும்
பல வழக்குத் தொடுப்பான்
இவன் அனுபவத்தை கேட்கும்
எமையெல்லாம்
சிரிக்க வைத்து
கொல்லாமல் கொல்வான்

மட்டக்  களப்புதான் இவனின் ஊரு
கொழும்பினிலே பெற்றுக் கொண்டான் பேரு
க.லோகநாதன் எங்களுக்குப்
 பேறு
இதோ வருகின்றான் -
நான் சொன்னதெல்லாம் உண்மையா
என்று பாரு!

(தொடரும்)

திங்கள், 15 மே, 2017

கவிஞர் நியாஸ் ஏ. சமத்


புதன், 26 ஏப்ரல், 2017

கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது
கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

- என். நஜ்முல் ஹுசைன்

(தொடர்ச்சி )



+++++++++++++++++
5. கலைவாதி கலீல்
+++++++++++++++++
பல்லாற்றல் கொண்ட ஒரு கலைஞர் - இவர்
சொல்லாற்ற லுடனியங்கும் கவிஞர்
சற்றேனும் சோர்வென்பதின்றி
சுறுசுறுப்பாய் இயங்குகின்ற
இளைஞர்

கற்றோர்கள் சபை பலவும் கண்டு
பெற்றவர்தான் பெருமைகள்; என்றும்
சளைக்காதே தன் கருத்தை கொண்டு
சரியென்று நினைத்த வைகளெல்லாம்
வளையாது வைப்பவராம் இந்த
பத்திரிகை உலகத்தில் மன்னன்

கலைவாதி கலீல் என்ற பெயராம்
பல தசாப்தங்கள் தமிழுலக பதிவாம்
எம்மோடும் கைகோத்து நின்று
வகவ மேடைகளை ஜொலிக்கவைக்கும் உறவாம்

வரவேண்டும் கலைவாதி இங்கு
எங்கள் தலைவாரி கவிதையினால் பொங்கு


++++++++++++++++++++
6. கம்மல்துறை இக்பால்
+++++++++++++++++++++


அணிகலனாய் வகவத்தில் இணைந்தார்
அணி சேர்க்கும் கவிதைகள் தந்தார்
மணியான கருத்து களாலே
மனங்களையே கவர்ந்து இவர்
வென்றார்

வித்தியாசம் இவர் கவிதை போக்கு
விதவிதமாய் ரசனையுள்ள நோக்கு
எத்திசையும் செல்ல வல்ல தாக்கி
ஏவுகணை போல் பாயும் தாக்கி

வகவத்திலே மின்னும் கம்மல்
வாஞ்சையோடு எமை சேர்ந்த செம்மல்
இலக்கியத்தை இன்பமென நினைக்கும்
இதயத்தைக் கொண்ட ஒரு கவிஞன்

கம்மல்துறை இக்பாலே வருக
கவிதையினால் எமை மயக்கிச் செல்க !


++++++++++++++++++++++
7. எம். பிரேம்ராஜ்
++++++++++++++++++++++

தமிழறிவு ஆழமாய் பெற்றான்
தமிழிலே விளையாட வல்லான்
தமிழோடு பிற அறிவும் கொண்டு
'தினக்குரல்' ஞாயிறு ஜொலித்தான்

கவிதைக்கு தன்மனது கொடுத்தான்
வகவத்தில் நல்ல பேர் எடுத்தான்
மேடைகள் பலவற்றில் ஏறி
தனக்கென்று கைத்தட்டல் குவித்தான்

கவிதையிலே பலபேரை மயக்கி
ரசிகர் நாம் என்று சொல வைத்தான்
சபையோரை விழி திறக்க வைத்து
அவர்கள் மனங்களிலே இவனும்தான்
நிலைத்தான்

தன்னை மனதுக்குள் பிரேம் போட
வைத்த - எம்.
பிரேம்ராஜ்ஜே
எங்கே காட்டி விடு
கவிதையில் உன் வீச்சே!

திங்கள், 24 ஏப்ரல், 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்.......

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்


1. சுபாஷினி பிரணவன்

அதியமானுக்கு மட்டுமா
ஔவைப் புலவர்
அதிகமான எங்கள்
கவிஞர்களிடமுமிருக்கிறார்
ஓர் அவைப் புலவர்

இங்கே பூனையாய் வந்தார்
கவிதையிலே
புலியாய் பாய்ந்தார்
தலைமையிலே
தலை மயிலாய் ஜொலித்தார்
இலை இவர்க்கு ஆற்றல்
என நினைத்த எம்மை
வீழ்த்தி இவர் நிலைத்தார்

கவிதாயினி சுபாஷினி பிரணவன்
நீ கவிதை சுடர் வீசும் பகலவன்
உன்னிடமிருக்கிறது
கவிதை கல் வீசும் கவண்
நீ வீசு; பார்ப்போம்
உனக்கு முன்னிற்பவர் எவன்?


2. எம்.எஸ்.தாஜ்மஹான் 


செந்தமிழை தன்நாவில்
புரட்டிப் போட்டான்
அதன்
இனிமையிலே தன்னைத்தான்
கட்டிப்போட்டான்
வகவத்தோடு தனக்குமொரு
கட்டுப் போட்டான்
வளம் மிக்க கவி எழுதி
ஒரு போடு போட்டான்

வாழ்த்தி-
கவி பாட வேண்டுமென்றால்
ரெடி என்பானே
அழகான வரிகளினால்
ஒரு பிடி பிடிப்பானே
தமிழுலகில் தனக்குமொரு
இடம் பிடிப்பானே
இன்று -
எம் காதினிக்க
நல்லதொரு கவி படிப்பானே


3. வெலிமடை ஜஹாங்கீர்

மடை திறப்பான் - கவிதை
மடல் தொடுப்பான் - வெலி
மடை பிறப்பான்
வெகுளியாய் சிரிப்பான்

ஒரு சொல் போதும்
இவன் கவிதைக்கு - அதில்
புகுந்து விளையாடும்
இவன் திறமைக்கு

சில வரிகளுக்குக்குள்ளே - கவிதையை
இவன் முடித்துக் கொள்வான்
அந்த வரிகளுக்குள்ளும் பல
முடிச்சுகள் அவிழ்த்து விடுவான்

புதியவன் அல்ல - வகவத்தில்
பழையவன் - என்றாலும்
இவன் கவிதைகள் என்றும் புதியன
அழி தடை - எழுந்து வா
வெலி மடை ஜஹாங் கீர்
காட்டு உன் கவிதையின் கூர்

(தொடரும் )

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

கவிஞர் பிரேம்ராஜ்


திங்கள், 13 மார்ச், 2017

அவனில்லாமல் நானில்லை..........! சிறுகதை










10/3/2017 விடிவெள்ளியில் இடம்பெற்ற எனது சிறுகதை 


அவனில்லாமல் நானில்லை..........!

-    என். நஜ்முல் ஹுசைன்
மல்காந்தி சுனிலின் அறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். இதற்கு முன்பு அவன் ஒரு நாளும் இவ்வளவு அழகாக அவனது அறையை வைத்தவனில்லை. இப்போது எல்லாவற்றையுமே சீராக வைத்திருந்தான்.
சுனில் தம்பி கெம்பஸுக்கு போனதன்பின் மாறியுள்ளதை உணர்ந்தாள். இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் மல்காந்தி தான் அவனது படுக்கையை சரி செய்து பெட் சீட்டை யெல்லாம் மடித்து வைக்க வேண்டும். அவனது சட்டை டிரவுஸரைக் கூட அங்கங்கே வீசி வைத்திருப்பான். மல்காந்தி தான் அவற்றை யெல்லாம் சீராக்கி வைப்பாள்.
அவர்கள் இருப்பது பெலியத்தவில். தம்பி சுனிலுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் எஞ்சினியரிங் படிக்க வாய்ப்பு  கிடைத்தது. அங்கே சென்று ஒரு வருடமாகிறது. விடுமுறைக்கு நேற்றுத் தான் வீட்டுக்கு வந்தான்
மல்காந்தி இப்போது தனது பெற்றோருடன் தான் இருக்கிறாள்அவள் திருமணம் முடித்தவள். ஆனால் இப்போது கணவனுடன் இல்லை. அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.
திருமணம் முடித்த முதல் நாளே மணவறைக்கு போதையுடன் வந்தவன். நண்பர்களுடன் சேர்ந்து நன்றாக குடித்துவிட்டு வந்திருந்தான். அன்று ஒரு மகிழ்ச்சியான நாள்தானே என அவள் அதை பெரிதாக கணக்கெடுக்க வில்லை.
தொடர்ந்து வந்த நாட்களிலே அவனை சாதாரணமாக சிகரெட் புகைத்து தள்ளுபவனாக கண்டு கொண்டாள்வழக்கமாகவே ஒவ்வொரு நாள் மாலையிலும் வேலையிலிருந்து  வீட்டுக்கு வரும்போது போதையுடன்தான் வருவான்எங்கேயாவது திருமண வீட்டுக்கோ, மரண வீட்டுக்கோ போனால் அந்தப் போதை பன்மடங்காகி இருக்கும்.
மல்காந்திக்கு ஒரே மனக்கவலை 'ஏன்தான் நம்மவர்கள் குடிகார மணமகனை திருமணத்திற்கு தகுதியற்றவனாக நினைப்பதேயில்லை. குடிப்பதை ஒரு சாதாரண பழக்கமாகவே கருதுகின்றனர்இவ்வாறான குடிகாரர்களால் எத்தனைப் பெண்கள் வாழாது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். '
நல்ல குணவதியான மல்காந்தியால் அவனோடு ஒரு வருடம்கூட இணைந்து வாழ முடியாமல் போயிற்றுஇப்போது வாழாவெட்டியாக தனது பெற்றோருடன் வந்து இணைந்து கொண்டாள்.
சுனில் தம்பியும் அப்படித்தான்நிறைய சிகரட் பிடிப்பான். நண்பர்களுடன் அடிக்கடி 'பார்ட்டி ' என்று சொல்லி குடித்து விட்டு வருவான். ஆனாலும் அவன் மிகவும் நல்லவன். எவ்வித குழப்படியும் பண்ணமாட்டான். குடி பழக்கத்தை விட்டு விடு என்றால் கேட்கவா போகிறான்.  'குடிப்பது என்பது எங்களவர்களுக்குத்தான் இரத்தத்திலேயே ஊறிய ஒன்றே. மகிழ்ச்சியிலும் குடிக்கிறார்கள்துன்பத்திலும் குடிக்கிறார்கள் ' குடியினால் வாழ்விழந்த மல்காந்தியினால்கூட தன் தம்பியைப் பார்த்து குடிக்காதே என்று சொல்ல முடியவில்லை - குடிப்பதை குறைத்துக் கொள் என்று சொல்வதைத் தவிர.
சுனில் வந்து கதவைத் தட்டினால் திறக்க வேண்டும்பார்ட்டிகளுக்குப் போனால் எப்படியும் இரவு பன்னிரண்டு ஒரு மணிக்குத்தான் திரும்பி வருவான்ஒரு வருடத்தின் பின் வந்திருக்கிறான். நண்பர்களுடன் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும்.
அவன் வரும் போது அம்மாவும் அப்பாவும் உறங்கியிருப்பார்கள்.
மல்காந்திதான் வீட்டுக் கதவை திறக்க வேண்டும்
இரவு சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தவாறே சோபாவிலேயே உறங்கி விட்டாள்.
அழைப்பு மணி சத்தம் அவளது தூக்கத்தைக் கலைத்தது.
குடித்து விட்டு வந்திருக்கும் தம்பியை வீட்டுக்குள் அழைத்து வரவேண்டும். தள்ளாடிக் கொண்டு வரும் அவனை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்இவையெல்லாம் வழமையாக நடைபெற்று வருபவைதான். இவற்றை எண்ணியவாறே கதவைத் திறந்தாள் மல்காந்தி. சுனில் தம்பி சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.
"சொரி அக்கா, கொஞ்சம் லேட்டாகிருச்சு" அவனது பேச்சிலே நிதானமும் தெளிவும் தெரிந்தது
மல்காந்தி ஆச்சரியத்தோடு சுனில் தம்பியைப் பார்த்தாள்.
அவன் போதையில் தள்ளாடவில்லை. குடியின் நெடியோ சிகரெட்டின் நாற்றமோ அவனிடம் வீசவில்லை.
நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போய்  வந்த சுனில் தம்பியை ஒருநாள் கூட மல்காந்தி இப்படிப் பார்த்ததில்லை.
தான் தூக்கத்தில் கனவு காண்கிறோமா என்று தன்னை ஒருமுறை கிள்ளியும் பார்த்துக் கொண்டாள்.
தம்பியின் பின்னாலேயே தம்பியின் அறைக்குச் சென்றாள்.
" தம்பிஇன்று நீ பார்ட்டிக்கு போகவில்லையா ?"
"பார்ட்டியிலிருந்துதான் வருகிறேன் "
" அப்ப நீ குடிக்கல்லையா ?"
"சிகரட் கூட  குடிக்கல்ல..." கூறி புன்னகைத்தான்.
"எனக்கு நம்பவே முடியல்ல.... என் தம்பியா இப்படி......"
"அக்கா, இப்ப அந்த ரெண்டு பழக்கத்தையும் அடியோட விட்டுட்டன்"
"என்ன அடியோட விட்டுட்டியா" ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றாள்அவளது தூக்கக் கலக்கம் காணாமல் போனது. அவளது மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
"என்ன ஒன்ட கெம்பஸ் வாழ்க்கை ஒன்ன அடியோட மாத்திருச்சா, இல்ல இல்ல இப்ப வெளங்கிச்சு நீ யாரையோ காதலிக்கிற ?"
இப்பொழுதும் சுனில் தம்பி புன்னகைத்தான்.
"என்னய எந்தக் காதலியும் மாத்தல்ல. எனய மாத்தியது ஏன்ட ரூம் மேட்"
"என்ன ரூம் மேட்டா ....?" அவளது ஆச்சரியம் தொடர்ந்தது.
"நான் கெம்பஸுக்கு போன நேரம் எனக்கு ஹொஸ்டல்ல ரூம் கெடைக்கல்ல. வெளியிலதான் ரூம் எடுத்தேன்ரெண்டு பேர் தங்குற ரூம். என்னோடதான் அவனும் தங்கினான். அவன் மெடிக்கல் செஞ்சான்.
ஒரு கெழமையிலேயே நாங்க ரெண்டு பேரும் நல்ல கூட்டாளி ஆயிட்டோம். பழகுறதுக்கு மிகவும் இனிமையானவன்.
ஒனக்குதான் தெரியுமே நான் ரொம்ப சிகரட் குடிப்பேனே. அங்கேயும் சிகரட் பிடிச்சன். கெம்பஸ் லீவு நாளுல கொஞ்சம் குடிப்பன் .
ஆனா அவன்கிட்ட எந்த கெட்டப் பழக்கத்தையும் நான் காணல்ல. அதுக்கும் மேல அவன் ஒழுக்கம் நெறைஞ்சவனா இருந்தான். எங்கட அறைய அவன்தான் ரொம்ப சுத்தமான வச்சிருப்பான். என்ட உடுப்பகூட அழகான மடிச்சி வைப்பான் . அவனோட சேர்ந்து அறைய அழகான வச்சிக்க நானும் கத்துக்கிட்டன். மொதல்ல அவன்ட முன்னுக்கு சிகரெட் குடிக்கிறத விட்டன்.


அவன்ட வீடு திஹாரில இருக்குது. ஒரு முற ஒரு திருமண வீட்டுக்கும் இன்னொரு முற ஒரு சாவு வீட்டுக்கும் அவனோட போனேன்.
நான் அந்த ரெண்டு எடத்திலேயும் ஒரு விஷயத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன்.
நாங்க எப்பவுமே திருமண வீட்டுக்கோ சாவு வீட்டுக்கோ போனா எங்கடவங்களுக்கு விசேஷமே குடிக்கிறதுதான். ஆனா அங்க அவங்க நல்லா சாப்பிட்டாங்க. ஆனா யாருமே குடிக்கல்ல. பொறவுதான் எனக்கு தெரிஞ்சிச்சு அவங்க யாருமே குடிக்கிறதில்லன்னுஅவங்கல்ல கொஞ்சம் பேர் குடிக்கிறவங்க இருக்காங்கலாம். அப்படியானவங்கள அவங்க மதிக்கிறதே இல்லையாம்எங்கட திருமண வீட்டுக்கும் சாவு வீட்டுக்கும் மிச்சம் பேர் வாறதே நல்ல குடிக்கிறதுக்குதானே.
இதையெல்லாம் பார்க்கிற நேரம் எனக்குள்ளேயே மாற்றம் நிகழ்ந்திச்சு. ஒன்ட வாழ்க்கையும் குடியாலதானே நாசமாச்சு என்று நானும் அடிக்கடி மனசுக்குள்ள வெந்து கொண்டுதான் இருந்தேன்அதனால எனக்கிட்ட இருந்த குடி பழக்கத்துக்கும், சிகரட் பழக்கத்துக்கும் விட கொடுத்தேன்எனக்கு இப்ப நல்லா வெளங்குது நான் மொதல்ல விட இப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கன்."
சுனில் தனது கதையை சொல்லிக் கொண்டிருந்தபோதே மல்காந்தி சொன்னாள்,
" நீ மட்டுமா மகிழ்ச்சியா இருக்கிற, ஒன் கதையை கேட்டு நானும்தான் மகிழ்ச்சியா இருக்கன். உன்ன நெனச்சி நான் ரொம்ப பெரும படுறன். ஏன்ட மாப்பிள்ளையும் ஒனய மாதிரி திருந்தியிருந்தா ஏன்ட வாழ்க்கை இப்படி நரகமாகியிருக்குமா?    சரி ஒன்ட கூட்டாளிட பேர சொல்லவே இல்லையே. அவர்ட பேரென்ன?"


"மொஹமட் முஸம்மில்"

******************************************************************************