எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 21 செப்டம்பர், 2016

போருதொட்ட ரிஸ்மி


வியாழன், 15 செப்டம்பர், 2016

உரிமைப் பேயாட்டம்





(டில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படி "காவிரி'யின் நீரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்கும் திறந்து விட்டது. அதனால் கர்நாடகம் எங்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை தலை தூக்கியது.............. )

"யாதும் ஊரே
யாவருங் கேளிர்"
இந்தியாவிலே
மீண்டும்
பொய்யாக்கப்பட்ட
பிரகடனம்

கணியன் பூங்குன்றனாரே
கணணி யுகத்திலே நீங்கள்
தோற்றுப்போனீர்கள்

உங்களை 'காவிரி'யிலே மூழ்கடித்திருக்கிறோம்
நாங்கள்
எமது உரிமையைப்
பாதுகாப்போம் -
மனிதத்தை விட்டுக்கொடுத்தாவது

ஏனெனில்
நாங்கள் "மனிதர்கள் "


- என். நஜ்முல் ஹுசைன்

 Image result for hyderabad violence