எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 2 அக்டோபர், 2023

கவிஞர் ந. தாமரைச் செல்வி

 

வலம்புரி கவிதா வட்டத்தின் 92 ஆவது கவியரங்கம் 29/09/2023 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவிஞர் ந. தாமரைச் செல்விக்கு கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த வருமாறு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
       - என். நஜ்முல் ஹுசைன்.                            தலைவர்,                                                         வலம்புரி கவிதா வட்டம்
         (வகவம்)

வலம்புரிக்கே நலம் புரிய
வந்து நின்றார் எங்கள்
வகவத்தில் தனக்கெனவோர் இடம் பிடித்தார்

நிலம்மீது ஓங்கு மொழி
தமிழைப் பற்றி
நின்றிருப்பார் தலைநிமிர்ந்து நாளும் வெல்வார்
சிலம்பெடுத்து வீசுகின்ற வீரனைbப் போல்
சிலிர்க்கின்ற சொல்லெடுத்து சுழன்று அடிப்பார்
நலம் பெறவே நானிலமும் வாழும் மாந்தர்
வளம் பெறவே எழுத்தெடுத்து பணியும் செய்வார்

ஆயிரமாய் முகநூலில் பதிவு செய்து ஆற்றலினை பலரறிய வைத்து இவரும்
ஆயுதமாய் தமிழைத்தான் ஏந்தி நாளும்
ஏற்றமுடன் முன்னேறி செல்வார் உண்மை
பாய்கின்ற புலி போலே பெண்களுக்காய்
அவர் உரிமை நலன்களுக்காய் எழுந்து நிற்பார்
தேய்கின்ற நிலவைப் போல் அல்ல இவரும்
வளர்கின்ற வான் பிறைக்கு உவமையானார்
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர் உள்ளம் தனிலேதான் தன் பெயரை பதிவு செய்து
உலவிடுவார் பொய்கை என்னும் தமிழின் ஆற்றில்
மெய் கையை நீட்டி இவர் புகழும் பெற்றார்
வலக்கையாய் இடக்கையாய் நண்பர் சூழ
வலம் வருவார் இலக்கியத்தில் நிமிர்ந்து நிற்பார்
இலங்கிடவே இவர் வடிக்கும் கவிதை மொழியால்
இங்கேயும் தனக்கென ஓர் இடமும் பெற்றார்

நூறுக்காய் நடை போடும் எங்கள் அரங்கம்
தொண்ணூற்றி யிரண்டை உன் தலைமேல் வைத்து
பூரித்து நிற்கிறதே புகழின் மணியே வா வந்து தலைமையினை ஏற்று நடாத்தி
நீயும் தான் சேர்த்துவிடு தமிழுக் கணியே


இது என்ன கேள்வி
உனக்கு இல்லையே தோல்வி
வா என் புதல்வி
கவிஞர்
ந. தாமரைச் செல்வி
என்றழைக்கிறதே
வகவ அரங்கம்
உன் கவிதையிலே அது
நிச்சயம் கிறங்கும்!

கவிஞர் ந. தாமரைச் செல்வி


    - என். நஜ்முல் ஹுசைன்