எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 1 அக்டோபர், 2015

கவிஞர் ஈழகணேஷுக்கு................

வலம்புரி கவிதா வட்டத்தின் 20வது கவியரங்கு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்கில் 27-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடாத்த கவிஞர் ஈழகணேஷுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
 

- என்.நஜ்முல் ஹுசைன்



ஆழம் நிறைந்த சொல்லுக்கு
சொந்தக்காரன்
ஆளும் இவனது வரிகள்
எங்கள் நெஞ்சின்ஓரம் - ஓர்
ஆளும் இவனது பார்வையை விட்டுச்
செல்லான் தூரம்
நாளும் சூழலைப் போற்றிப் பாடும்
பாட்டுக்காரன்


வாழும் மனித நேயன்
எங்கள் சொந்தக்காரன்
வாழும் வகவ மூச்சுக்காற்றின்
பங்குக்காரன்
சூழும் எங்கள் சிக்கல் தீர்க்கும்
கெட்டிக்காரன்
எதையும் இதமாய் எடுத்துக் கொள்ளும்
பக்குவக்காரன்

நீளும் இவனது புகழைப் பட்டியல்
போட்டுச் சொன்னால்
போதும் இனிநாம் தலைமை ஏற்க
அவனை அழைப்போம்

ஆளும் கவியே ஈழகணேஷே தலைமை ஏற்பாய்
கோலும் ஏந்தி கொள்கை நாட்டி இதயம் அமர்வாய்

ஈழகணேஷ்
இன்றுனக்கு தலைமை
மறையவை எங்கள் முதுமை