எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 27 மார்ச், 2018

இதயத்துள் வாழ்பவரே ஈஸ்வரன் ஐயாவே !







இதயம் கனத்தேதான் இங்கே பாட வந்தேன்
ஈரவிழி
துடைத்தே ஐயா ஈஸ்வரனை தேடி
வந்தேன்
உதயம் என்றிருந்தால் மறைவும் அங்கிருக்கும்
ஊமையாய்
போனோமே உங்களையே மறையவிட்டு

ஈஸ்வரனே
பெருமகனே இதயத்துள் வாழ்பவரே
ஈனக்குரல்
எடுத்தே நாங்கள் புலம்புகின்றோம்
தூசாகிப்
போனோம் நாம்; துரும்பாகித் தான்போனோம்
தூய மனததனைத் தேடி அலைகின்றோம்

மானிடரா
நீங்கள் இல்லை ஒருபடிமேல் சென்றவரே
மானிடரின்
இடர்கண்டு துடைத்திடவே துடித்தவரே
கூனிடவே
வைக்காமல் வறியோரை ஆதரித்து
குறை தீர்த்து வைத்த குணம் குவலயத்தில்
யார்க்கு வரும் ?

கோடிபணம்
வைத்திருந்தும் கோடீஸ்வரன் 'பணி'வினிலே
கோடியிலே
நிற்க வைத்து தலைகுனிய வைக்காமல்
நாடிவந்த
பேர்களது நாடியினைத் தானறிந்து
தேடிச்
சென்று கொடுத்தவரே தேடி உம்மை அலைகின்றோம்

 வியாபாரக்
கடலினிலே முத்தெடுத்து மகிழ்ந்திருந்தும்

வியப்புறவே
செய்தீர்கள் இலக்கியத்தி லேஜொலித்து
தயாராகவே
வந்தோம் உங்களது நகைச்சுவைகள்
தேன்சொட்டும்
உரையினிலே எமை மயக்கி நாம்
செல்ல

தந்தைவழி
வந்ததுங்கள் உயர்பண்பு ஐயாவே
தகைமைசால்
ஈஸ்வரனே தகைமையினை மதித்தவரே
எந்தன்மகள்
வக்கீலாய் ஆனதென அறிந்தவுடன்
அனுப்பிவைத்து
பரிசினையே எங்களையே குளிரவைத்தீர்

என்கவிதை
தான் கேட்க ஆவலென சொன்னீர்கள்
இக்கவிதை
தனைக் கேட்க நீங்கள்இலை என்
சொல்வேன்
இன்கவிதையால்
வாழ்த்தி இன்புறவே நானிருந்தேன்
இரங்கல்
கவிபாட  வைத்து
விட்டுச் சென்றீர்கள்

இதயங்கள்
வென்றவரே வீ.டி.வீ
பெருமகனே
ஈஸ்வரனே
ஐயாவே எங்கேயும் செல்லவில்லை
விதையாக
வேநீங்கள் எம்மனதில் உள்ளீர்கள்
விதைத்தோம்
நாம் எம்மனதில் ஈஸ்வரன் எனும் சொல்லை

 உங்களையே
மறையவிட்டு துயருற்றோர் எண்ணிக்கை

கணக்கினிலே
அடங்காது; எல்லோர்க்கும் சொந்தம்தான்
தங்கமகனாரே
இனம்கடந்த பெருமகனே
தாங்கவில்லை
துயரம்தான்; இன்றைக்கும் நாம் அழுவோம்

எந்நாளும்
உங்கள் புகழ் இம்மண்ணில் நிலைத்திருக்கும்
எம்மனதில்
உங்கள் பேர் என்றென்றும் நிறைந்திருக்கும்
கண்ணோடும்
நீருக்குள் உங்களது நிழலிருக்கும்
ஐயாவே ஈஸ்வரனேஎன் கவிதைக்கும் உயிரிருக்கும்
!

                                                                -              என். நஜ்முல் ஹுசைன்

(கம்பளைதாசனின்
முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் 18.03.2018 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 க்கு கொழும்பு 12, பிரைட்டன்
ரெஸ்ட் ஹோட்டலில் இடம்பெற்ற மறைந்த தேசபந்து, அறங்காவலர்
தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் பெருந்தகையை நினைவுகூர்ந்து
இடம்பெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாடப்பட்ட இரங்கல் கவிதை)

செவ்வாய், 13 மார்ச், 2018

கவிஞர் எஸ். தனபாலன்

வலம்புரி கவிதா வட்டத்தின் 46 வது கவியரங்கு 01-03-2018 அன்று கொழும்பு, அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்க கவிஞர் எஸ். தனபாலனுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன். – 

என். நஜ்முல் ஹுசைன், தலைவர் - வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)

உள்ளத்தை கிள்ளிடும் கவிதைகளால்
உட்கார்ந்திருப்பான் எம் இதயத்திலே
பள்ளத்தில் வீழ்ந்திடும் மானுடத்தை
பாட்டாலே உயர்த்திட பாடிடுவான்
துள்ளியே பாடிட ஸ்ரீ தருக்கும்
தந்தவன் நல்ல கவிவரிகள்
அள்ளியே செல்கிறான் எம் மனதை
பிச்சை யப்பா எமை பிய்ச்சி யப்பா

வகவம் எங்களின்   கவிக் கூடம்
வான வில்லாய் இவன் வந்து நின்றான்
பழகும் போதே பணிவுடனே
பனியாய் இவனும் குளிர்ந்து நின்றான்
நிலவும் உயர்ந்த குணம் காட்டி
நிதமும் உறுதுணை யாய் நிற்பான்
நிலவும் வானும் போன்று கவி
நிறைவாய் தந்து இலங்கிடுவான்

தலைமை தன்னை இன்றேற்க
தனபால னுமே உடன்பட்டான்
கலைமை கொண்டே கவிஎழுதி
கவிஞர் தம்மை ஒன்றிணைத்தான்

கவிஞா எஸ். தனபாலா

நிலைமை உயர மானுடத்தின்
நிஜமாம் கவிதை தனைதந்து
உளமை தன்னைக் காட்டி விடு
கவி யரங்கில் உன்றன் புகழோங்க
வெற்றிக் கொடிநீ நாட்டிவிடு

கவிஞர்  எஸ். தனபாலன்
இனி கவியரங்கு
உன்றனக்கு
கவிஞர்களின் படை நடத்து!