எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்

வலம்புரி கவிதா வட்டத்தின் 65 ஆவது கவியரங்கு 08/02/2020 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது
கவியரங்கினை தலைமையேற்று நடாத்த கம்பன் கழக "மகரந்தச் சிறகு" வென்ற பன்னூலாசிரியர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -

என். நஜ்முல் ஹுசைன்,  தலைவர்,  வலம்புரி கவிதா வட்டம்  (வகவம்)


ஆளுமை என்று சொல்லி
அடையாளம் காட்டச் சொன்னால்
ஆளையே தேடி அலைய
அவசியம் இல்லை இவரை
ஆர்வமாய்
காட்டலாமே முரண்பட யாருமில்லை

எத்தனை காலம் இந்த
இலக்கிய உலகில் ஆட்சி
எத்துணை துறைகள் தொட்டு
காட்டினார் இவரின்  மாட்சி
முத்தென நூல்கள் தந்து
முடியினைச் சூடி இவரும்
முத்திரைப் பதித்தே பரிசு
பலமுறை பெற்றுக் கொண்டார்

பத்திரிகை வானொலியாய் மட்டுடன் இருந்தபோது
பத்திரப்படுத்திப் பெயரை
மனதினில் பதிய வைத்தார்
ஓட்டமாய் ஓடி ஓர்நாள்
வகவத்தின் வாசல் வந்து
ஓட்டமா வடியின் அஷ்ரப்
என்றவர் நண்பரானார்

எத்தனை பரிமாணங்கள்
எடுத்திவர் எழுந்து நின்றார்
எழுத்தினில் மட்டுமல்ல
ஒலி ஒளி பரப்பில் கூட
தனக்கென இடமும் பிடித்தார்

வகவத்தின் கவி யரங்கில்
வளமான கவிதை இறகால்
வருடிய இவரும் இன்று
மகரந்தச் சிறகுப் பூட்டி
மாண்புடன் தலைமை ஏற்றார்

அறுபத்தி ஐந்தில் நிற்கும்
அற்புத வகவ மேடை
அழகுற தலைமை யேற்க
அஷ்ரப்சி ஹாப்தீன் கவிஞர்

கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்
வகவப் படையொன்று
உங்கள் பின்னால்
அவர்களை வாழ்த்திடுங்கள் உங்கள் "பென்"னால்