எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கவிஞர் வெலிப்பன்ன அத்தாஸ்





வலம்புரி கவிதா வட்டத்தின் 25 வது கவியரங்கு கொழும்பு அல்  ஹிக்மா கல்லூரியில் 22/02/2016 அன்று நடைபெற்றபோது கவியரங்க தலைமையை ஏற்று நடத்துமாறு கவிஞர் வெலிப்பன்ன அத்தாஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்  - என். நஜ்முல் ஹுசைன்

தென்னிலங்கை தென்றல் இந்த கவிஞர் - எங்கள்
தேசத்தின் மூத்த எழுத் தாளர்
தன்னுணர்வை தமிழுக்குக் கொடுத்து - எமை
தலை நிமிர்ந்து பார்த்திடவே வைத்தார்

கற்பிக்கும் தொழிலை மேற்கொண்டார் - அதை
தொழிலல்ல சேவை என்று நின்றார்
வற்றாத ஆற்றலத னாலே
வளம்மிக்க அதிபர் என மிளிர்ந்தார்

சிறுவருக்கும் இலக்கியங்கள்
படைத்தார் - பல
சிறுகதைகள் நமக்களித்து
களித்தார்
சுறுசுறுப்பாய் இயங்கும் இக் கவிஞர்
முறுவலித்தே வகவத்தில்
இணைந்தார்

மூத்த கவி இக் கவியை நாங்கள்
முழு
மனதோடு தான் வர வேற்றோம்
யாத்து கவி கொண்டு வரும் கவிஞர்
கவிதை
கோத்தெடுத்து நறுமணமே வீசும்
பாதிறமே காட்டுங்கள் என்று ……
அதில் உங்கள்
பாத்திரமே காட்டுங்கள் என்று ……..

கொடுத்திடுவோம் இன்று
கவியரங்க தலைமை யினை
கவிஞர் அத்தாஸுக்கு

வழிவிடுவோம்
வெடிக்கப்போகும் எங்கள்
கவிஞர்களின்
கவிதை பட்டாசுக்கு..