எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கவிஞர் கம்மல்துறை இக்பால்,

வலம்புரி கவிதா வட்டத்தின் 70 ஆவது கவியரங்கு 01 – 09 – 2020 செவ்வாய்க்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்க கவிஞர் கம்மல்துறை இக்பால் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன். - என். நஜ்முல் ஹுசைன், தலைவர் - வகவம் 

அடக்கம் தனை தன்னுள்ளே வைத்து 
அகங்காரம் என்றெதுவும் இன்றி 
தொடக்கம் முதல் இலக்கியத்தில் இயங்கி 
தெரியாதது போல் இவரும் இருப்பார் 
நடக்கின்ற வற்றையெல்லாம் ரசித்து 
நல்லவற்றைப் பாராட்டி மகிழ்வார் 
கிடைக்கின்ற போதெல்லாம் எழுதி 
குவித்தாலும் இலைமறைத்த காய்தான் 

 தசாப்தங்கள் பலவற்றைத் தாண்டி 
தன் திறமை பத்திரிகைத் தாளில் 
உசாராக இவர் பதித்தாலும் 
எங்கேயோ எங்கேயோ போட்டார் 
விசா தந்து அழைத்தவக வத்தால் 
வியப்புற்றார் தன்நிலைமை கற்றார் 
அசாதார ணகவிஞன் தானும் 
என்ற உண்மை இவர் உணர்ந்து கொண்டார் 

 கட்டிடத் துறைதன்னில் மிளிர்ந்து 
காரியங்கள் ஆற்றிட்ட போதும் 
எட்டிடும் துறை எங்கள் கவிதை 
என்பதையே உணர்ந் தின்று எழுந்தார் 
பட்டிட்ட அனுபவங்கள் எல்லாம் 
பாங்காக படைத்துவிடு மிவரை 
கட்டியேநாம் கூட்டி வந்தோம் 
கவியரங்கத் தலைமையையும் தந்தோம் 

கம்மல் துறை தந்த இக்பால் 
கண்ணியம் பொருந்திய ஓர் ஆள் 
சம்மதம் சொன்னாரே அரங்கை 
 சறுக்காமல் தலைமேலே ஏற்க 
கம்பனை வள்ளுவன் தம்மை 
காட்டுக கவிஞரோ டிணைந்து 
எம்பியே குதித்திட வைப்பீர் 
எம்புகழ் திக்கெட்டும் பரவ 

கவிஞர் கம்மல்துறை இக்பால், 

கவியரங்கை உங்களிடம் தந்தோம் 
எங்கள் காதுகளில் கம்மலிட்டு ஜொலிக்க 
வைப்பீரென்று 
எதிர்பார்த்து நாங்களிங்கு நின்றோம் !