எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 14 ஆகஸ்ட், 2013

நோன்புப் பெருநாள் இஸ்லாமிய கீதம்

நோன்புப் பெருநாள் விசேட நிகழ்ச்சி நேத்ரா தொலைக்காட்சியில் 09-08-2013 அன்று ஒளிபரப்பானபோது இடம்பெற்ற எனது இஸ்லாமிய கீதம் . இசை : டோனி ஹசன்   பாடியவர் : முஸ்தபா


கை வீசி கொடுத்தோர்க்கு பெருநாள்  - இரு 
கை ஏந்தி கேட்டோர்கள் இறை யருளைப் பெறும் நாள் 
மெய் வருத்தம் பாராது  இரவில் 
மேலோனை வணங்கியதால் 
மேதினிக்கே  திருநாள்                                                   
                                                                                   (கை வீசி..)


தீமைக்கு தீ வைக்க துணிந்து விடு - அந்த 
திட்டத்தை ரமழானில் படித்து விடு 
இம்மைக்கும் மறுமைக்கும் பாலமிடு -அதை 
இறையோனின் மறைதன்னில் கண்டு எடு 
ஊமைக்கும் கனவுண்டு; தெரிந்து கொடு  -அதில் 
நரகத்தின் வேதனையை விரைந்து டு
                  
                                                                                           (கை வீசி.....) 

முப்பத்தை காட்டிய திங்கள் இது - அல்லாஹ் 
முகப்பத்தை கூட்டியே சிரிக்கிறது
தப்பைத்தான் திருத்திய அருளும் இது - நரகம் 
தப்பத்தான் வழி காட்டி மறைகிறது 
ஒப்பனை பண்ணித்தான் செல்கிறது - மீண்டும் 
வரும்வரை அதன் வழி நின்று விடு 
                                                                                             (கை வீசி.....)

                              

                                                 -  என். நஜ்முல் ஹுசைன்