வலம்புரி கவிதா வட்டத்தின் 120 ஆவது கவியரங்கு 02/03/2026 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
எழுந்திவன் கவிதை மண்ணில்
எடுப்புடன் உலவுகின் றான்
எழுதிய கவிதை தன்னால்
எழிலுற திகழுகின் றான்
அழுத்தியே மரபு தன்னை
அகமதில் வளரவிட் டான்
பழுதிலா பலரின் நெஞ்சை
பறித்திவன் இடம்பிடித் தான்
முனைப்புடன் முகநூல் தன்னில்
முழுவதும் பழகுகின் றான்
வினைதிறன் காட்டும் வண்ணம்
விசையுடன் தொடருகின் றான்
நினைக்கவே முடியா ரசிகர்
நினைவினில் நிலவுகின் றான்
தனக்கென பெயரும் பெற்று
தலைதனை நிமிர்த்திநின் றான்
வாழையின் தோட்டம் என்ற
வளமுறு பெயருக்கேற் ப
வாழையின் வரிசை தன்னில்
வஸீரிவ னுழைந்துவிட் டான்
பேழையாம் இலக்கி யங்கள்
பெருமையாய் வழங்கிவைத் த
வாழையின் வாரிசென் ற
வெகுமதி இவனும்பெற் றான்
வலம்புரி களத்தில் மின்னி
வலமிவ னிருக்கைபோட் டான்
நிலவென இவனும் இன்று
நிறைவுடன் தலைமையேற் றான்
உலகெலாம் தமிழை வார்த்து
உரியதோர் இடமும்பெற் றான்
மலரதன் மணத்தை வெல்லும்
மகிமையாய் அரங்கில்நின் றான்
கவிஞர்
வாழைத்தோட்டம் எம். வஸீர்
இன்றுங்கள் கையில் இருப்பது
நூற்று இருபது
இதில்
காட்டியே நிற்க வேண்டும்
கவிதை சிறப்பது
இடையிடைய
எழவேண்டும்
உணர்வுகளின் நெருப்பது
நிறைவேற்றி வைக்கவேண்டும்
எங்கள் விருப்பது
சபை
கரகோஷம் செய்து
உதிர்க்க வேண்டும்
அழகிய சிரிப்பது
வாருங்கள் கவிஞர்
வாழைத்தோட்டம் எம். வஸீர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக