எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 3 மார்ச், 2026

கவிஞர் எம்.பீ.எஸ். பாலா



வலம்புரி கவிதா வட்டத்தின் 119 ஆவது கவியரங்கு 01/02/2026 அன்று கொழும்பு, ஜிந்துபிட்டி நீதிராஜா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் எம்.பீ.எஸ். பாலா அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்
     வலம்புரி கவிதா வட்டம்
     (வகவம்)

எம்.பீ.எஸ். பாலா

இவர் எம்மைக் கவர்ந்தது

இவருக்குள்ள நல்ல மனதின்
சிறப்பாலா ?
இவருக்குள் குடியிருக்கும்
தமிழின் இருப்பாலா ?
எப்போதும் பணிவு காட்டும்
நல்ல பண்பாலா ?
எல்லோரையும் அரவணைக்கும்
இவரின் அன்பாலா ?
இவர் ஏந்தும்
புகைப்படக் கருவி எனும்
துருப்பாலா ?
கவிதைப் படகை
இவர் செலுத்தும் துடுப்பாலா ?
பிறருக்கும் வாரி வழங்கும்
கைகளின் சிகப்பாலா ?
இவரிடம் இருக்கும்
வெள்ளை மனதின் வனப்பாலா ?
எப்போதும் காட்டும்
முகச் சிரிப்பாலா ?
எறும்புபோல் இயங்கும்
இவர் சுறுசுறுப்பாலா ?
இவரிடம் இருப்பது
வள்ளுவன் முப்பாலா ?
இவர் எங்களவர்
என்று சொல்ல ஆசைப்படும்
எங்கள் தவிப்பாலா ?

எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி
எங்கள் முன்
நிமிர்ந்து நிற்கிறார்
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா

சின்னக் கவிதைகளில்
சின்னம் பொறிப்பவர்
எம்.பீ.எஸ். பாலா
தமிழக மண்ணில்
முடிசூடிக் கொண்டதும்
இதனாலா ?

கவிஞர் எம்.பீ.எஸ். பாலா
இன்றவர் தலைமையில்
போடப் போகிறார்  கோலா
கவியரங்கில் ஓடப் போகிறது
கவிதை
தேனா பாலா



கவிஞர் எம்.பீ.எஸ். பாலா

இந்தக் கவியரங்கு
நூற்றுப் பத்தொன்பது
இன்றெங்கள் உள்ளங்களை
வெல்லப் போவது
வெல்லம் போன்ற
உங்கள் அன்பது!

உறுதியாய் சொல்கிறேன்

இன்னல்களுக்கு மத்தியிலும்
இன்று
தலைமையேற்றிருக்கிறீர்கள்
நீங்கள்

எங்களை வெல்லப் போவது
வெல்லம் போன்ற
உங்கள் அன்பது!
வாருங்கள்
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா





கருத்துகள் இல்லை: