எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

கவிஞர் ராஜா நித்திலன்

 (வலம்புரி கவிதா வட்டத்தின் 98 ஆவது கவியரங்கு 24/03/2024 ஞாயிறு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் ராஜா நித்திலன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்)


   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்,
     வலம்புரி கவிதா வட்டம்
     (வகவம்)



வளமாக வேஎங்கள் வலம்புரியும்
வீறுநடை போட்டிடவே
வேண்டுமென்ற உளம்கொண்ட ஓரிளைஞன் எம்மோடு
உறுதியுடன் உழைத்திடவே முன்னே வந்தான்
இளம்ரத்தம் எமக்கிங்கு
உறுதுணையாய்
இருப்பதனை நாம்கண்டு மகிழ்வே உற்றோம் உள்ளம் நெகிழ்ந்தோம்
களம்தன்னில் இவனை நாம்
ஏற்றிவிட்டு
கண் இமைக்காம லே நாம்
பார்த்து நின்றோம்

இவன் சொல்லும் கவிதைகளோ
தாளிலி ல்லை
இதயத்திலே ஏந்தி
வந்துநிற்பான்
அவல்போலே இனித்திடவே
வாய்திறந்து
அருவியென தமிழெடுத்துக் கொட்டிடுவான்
சுவரினிலே சித்திரமே தீட்டுகின்ற
ஆற்றலுளான்
மனங்களிலே அழகுறவே செம்மையுடன் கவிதை படம்
வரைந்திடுவான்
கவர்ந்தேதான் நெஞ்சங்கள்
பலவற்றில் நீங்காமலே இவனும் குடியிருப்பான்
கருப்பொருளில் வேதாந்தப்
புதையல் வைத்து
சிந்தைக்கு இவன் தீனிப் போட்டிடுவான்

மேடையிலே கவி படித்துப் போகும் இவனை
மேல்தட்டிப் பாராட்டா தாரும்
உளரோ
கூடையிலே தமிழ் அள்ளி வந்தே நிற்கும்
ராஜா நித்திலனைப் பாராட்ட
முடிவெடுத்தோம்
மேடையிலே கவித் தலைமை
உனக்கே என்று
மேன்மையுடன் சீராட்டி
அமர வைத்தோம்
ஏடைநீ திறந்து விடு எங்கள் கவிஞர்
ஏற்றம் பெற துணை வருவார்
என்றே சொன்னோம்


கவிஞர் ராஜா நித்திலன்

இது கவியரங்கு
தொண்ணூற்றி எட்டு
நீ
வண்ணத் தமிழெடுத்து
வானை முட்டு


எங்கள் கவிஞரொடு
கைகள் பிணைத்து
ஏறிச் சென்றே நீ
புகழை எட்டு

வருக
கவிஞர் ராஜா நித்திலன் !


 - என். நஜ்முல் ஹுசைன்

கருத்துகள் இல்லை: