எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 24 ஏப்ரல், 2024

கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ்

 வலம்புரி கவிதா வட்டத்தின் 99 ஆவது கவியரங்கம் 23/4/2024 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன் 

   - என். நஜ்முல் ஹுசைன்

     தலைவர், வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


சுறுசுறுப்பாய் பல பணிகள் தன்னில் நுழைந்து

சுமையென்றே எண்ணாது கடமை ஆற்றும் 

முறுவலிக்கும் இதயத்தார்; என்றும் முன்னே 

செல்வதற்கே துணிகின்ற மனமு முள்ளார் 

வறுத்தெடுக்கும் வெயிலிலே வாடும் மாந்தர் துயர்தீர்க்கும் 

மழையெனவே கவிதை பாடி

நறுமணத்தில் நம்மையெல்லாம்

மகிழவைக்கும் கவிஞரிவர் 

வாழ்த்துரைத்து வரவேற்போமே 


சட்டத்தை தன் வாழ்க்கைப் பயணமாக்கி

சத்தியத்திலும் நிலைக்க வேண்டுமென்று

கட்டத்துக்குள் தன்னை நிலைநிறுத்தி

கண்ணியமாய் பலர் மனதில் எழுந்து நிற்கும்

பட்டங்கள் பலவற்றை கல்வியோடும் 

பற்றித்தான் பிடித்திருக்கும் 

கவிதையோடும்

எட்டித்தான் பிடித்தவர்க்கே 

எங்கள் தலைமை தந்தேதான் நாம் மகிழ்ந்தோம்; அரங்கில் வைத்தோம்


எத்துறையில் தான் சார்ந்து இருந்த போதும்

இலக்கியத்தின் தாகத்தை நெஞ்சில் ஏந்தி

பத்திரிகை கவிதையென நின்றே இலங்கி

படித்ததுவும் பகர்வதுவும் பத்தி எழுத்தில்

முத்திரையே பதித்தவரை அழைத்து வந்தோம்

முன்னின்று கவியரங்கைத்

தலைமை யேற்க 

வித்துவத்தை காட்டுங்கள் எங்கள் அரங்கில்

வீறுடனே எம் கவிஞர் படையினோடு 


கவிஞர்

சட்டத்தரணி

ரஷீத் எம். இம்தியாஸ் 

தொண்ணூற்றி எட்டுக் கவியரங்கைத் தூக்கி வந்தோம்

தொண்ணூற்றி ஒன்பதனை 

உங்கள் தலைமேல் வைத்தோம்

நூறினிலே நாங்களுமே 

சுடராய் மின்ன

நூற்று ஒரு கவி படித்து

வாசல் திறப்பீர் 


வருக

கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ்






கருத்துகள் இல்லை: