வலம்புரி கவிதா வட்டத்தின் 110 ஆவது கவியரங்கு 12/04/2025 சனிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞரும் எழுத்தாளருமான எம்.ஏ. ரஹீமா அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்,
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
எழுத்துலகை நிமிர்ந்தேதான்
பார்க்க வைத்தார்
எழுத்தாளர் பலர்மனதை
கொள்ளையிட்டார்
அழுதிருக்கும் சமூகத்தின்
அவலம்தீர
அடம்பிடித்தே தன் எழுத்தில்
படமும் பிடித்தார்
எழுந்திருக்கும் சிறுகதையில்
கவிதையுலகில்
எடுப்பாக இவர்நின்று
மிளிருகின்றார்
உண்மைதான் சிலகாலம்
அஞ்ஞா வாசம்
இவர்புரிந்து
பண்ணாமல் எழுத்துப் பணியும்
தனித்திருந்தார்
கண்ணியமாய் வகவம் தான்
இழுத்து வந்து
கசடறவே எழுதுங்கள்
மீண்டும் என்று
திண்ணியமாய் உற்சாகம்
ஊட்டியதை
இவ்விடத்தில் சொல்வது எம் கடமையன்றோ
கல்வியிலும் முடிசூடி இருந்த
எம்ஏ
ரஹீமா வின்
பேராற்றல் மீண்டும்
துளிர்க்க
எல்லையற்ற மகிழ்ச்சியுடன்
எழுதுகின்றார்
கவியரங்க தலைமையினில்
அன்றும் ஜொலித்த
வல்லவராம் ரஹீமாவை
விழைந்தே அழைத்தோம்
நூற்றிபத்தின் தலைமையினை
அவர்க்கே தந்தோம்
கவிஞர், எழுத்தாளர்
எம்.ஏ. ரஹீமா
110 ஆவது கவியரங்கம்
உங்களிடத்தில்
எம் கவிஞர்கள்
வைக்கட்டும் உங்களை
உயரிடத்தில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக