எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 12 ஜூலை, 2025

கவிஞர் தெஹியோவிற்ற இரா. சிவராசா

 வலம்புரி கவிதா வட்டத்தின் 113 ஆவது கவியரங்கு 10/7/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்க தலைமையை ஏற்று நடாத்த கவிஞர் தெஹியோவிற்ற இரா. சிவராசா அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.


- நஜ்முல் ஹுசைன் 

தலைவர் 

வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)




தமிழ் என்று மொழிவதிலே இன்பங் கண்டு 

அமிழ் தென்று அதன் சுவையில் தேனை உண்டு திமிர் கொண்டு நான் கவிஞன் என்றே மொழிந்து நிமிர்ந் தேதான் படைக்கின்ற ஆற்றல் உள்ளான் 


பல்வேறு பட் டங்கள்

தன்னைச் சுமந்து 

வல்ல மைகள் தன்எழுத்தில் 

காட்டி நின்று 

அல்லல் படும் மாணவர்க்கு கரங்கள் நீட்டி 

எல்லை இல்லா மகிழ்ச்சியிலே திளைக்கும் ஒருவன் 


வகவத்தின் படிகளிலே 

ஏறி நின்று 

அகமதிலே குடியிருக்கும் 

கவிதை பாடி 

சுகமாக தன் பணிகள் 

தலையில் கொண்டு 

திகழ்கின்றான் தனக்கும் என பெயரை வைத்து 


ஒரு கவிதை யேபாடி 

ஓடிச் செல்லும் 

அருங்கவிஞர் சிவராசா 

மேடை அமர்த்தி 

பெருங் கவிஞர் கூட்டத்தை பொறுப்பாய் தந்தோம் 

இருந்தே தான் தலைமையிலே நன்றே சிறக்க 


கவிஞர் தெஹியோவிற்ற 

இரா. சிவராசா


இன்றெங்கள் கவியரங்கு 

நூற்றி பதின்மூன்று -இதில் காட்டிடவே வேண்டும் நீங்கள் 

நல்ல பல சான்று 

தலைமைதான் உங்களுக்கு 

அதை மனதில் ஏற்று பெருக்கெடுத்து ஓடட்டும் கவிதை எனும் ஊற்று !

கருத்துகள் இல்லை: