பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
வலம்புரி கவிதா வட்டத்தின் 116 ஆவது கவியரங்கு 06/10/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் லைலா அக்ஷியாவிற்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
எத்தனையோ ஆற்றல்கள் தன்னுள் வைத்து
எப்போதும் சுறுசுறுப்பின் வடிவமாகி
வித்தைகள் பலகாட்டும்
விந்தை செய்து
இத்தினத்தில் வகவத்தின்
தலைமை ஏற்று
வித்துவமாய் கவியரங்கை
நடத்திச் செல்ல
வஞ்சியிவள் வந்துநின்றாள்
எங்கள் மேடை
அறிவிப்புத் துறையினிலே
அழகாய் மின்னி
அகமகிழும் வார்த்தைகள்
அன்பாய் பேசி
தெறிக்கின்ற பொருளுள்ள
கவிதை பாடி
தெரியாதோர் மனங்களையும்
தன்பால் இழுத்து
அறிவென்னும் ஆயுதத்தால்
தன்னை வடித்து
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
எழுந்து நிற்பார்
எப்போதும் எம்கவிதை
மேடை வந்து
ஏற்றமிகு கவிதைகளால்
சபையை ஈர்த்து
தப்பேதும் இல்லாமல்
தனக்கே என்று
தனியான தோர்இடத்தை
பெற்றுக் கொண்டார்
இப்போது இவரழைத்து
இவரின் தலையில்
எம்கவிதை அரங்கினையே
நாமும் வைத்தோம்
அப்பப்பா என்றேநாம்
போற்றி மகிழ
கவிதைமகள் லைலாக்கே
செவிகள் தந்தோம்
கவிஞர்
லைலா அக்ஷியா
இன்றெங்கள் கவியரங்கு
நூற்றுப் பதினாறு
உங்கள் தலைமையிலே
ஓடட்டும்
அமுதத் தேனாறு
வாருங்கள்
கவிஞர் லைலா அக்ஷியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக