எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 6 நவம்பர், 2025

கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்

 




வலம்புரி கவிதா வட்டத்தின் 117 ஆவது கவியரங்கு 05/11/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடத்த கவிஞர் ஸ்ரீதேவி கணேஷனுக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்

- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)




அழகு தமிழ் சொல்லெடுத்து
இதயம் கவர்வாள்
அலங்கார மொழி உரைத்து முன்னே நிற்பாள்
பழகியவள் பண்பினிலே
உயரம் காண்பாள்
பணிவினிலே தலைகுனிவாள்; நிமிரும் கூர்வாள்
சுழன்றுஅவள் தன்பணியை தலைமேல் வைப்பாள்
சுறுசுறுப்பாய் நடைபயின்று
நெருப்பாய் உழைப்பாள்

அறிவிப்புத் துறையினிலே
ஆற்றல் காட்டி
அதிலுள்ள நுணுக்கங்கள்
அறிவாய் போற்றி
குறிப்பாக தன்நாமம்
மிளிர்ந்தே ஒளிர
குறையகற்றி செயல்பட்டு
முன்னே செல்வாள்
பறித்தேதான் இதயங்கள்
பாவை இவளும்
பாங்காக வே நல்ல
பெயரில் வாழ்வாள்
குறித்தேநாம்  இவள்ஆற்றல்
தன்னைக் கண்டு
கொடுத்தோமே நம்தலைமை
இன்றே இங்கே


ஸ்ரீதேவி கணேஷ னெனும்
இவளின் வரிகள்
சிரித்தேதான்  பலர் சிந்தை
கவர்ந்து நிற்கும்
அறிந்தேநாம் இவரழைத்து
வகவ அரங்கை
தலைமேலே வைத்தோமே
நாமும் மகிழ்ந்தோம்
தரித்தெங்கும் நிற்காமல்
கவிதை கங்கை
தலைநிமிர்ந்து நடைபோட்டு
தடைகள் தாண்டும்
பறித்தெங்கள் கவிஞர்களும் கவிதைஉள்ளம்
பின்செல்வார்
இக்கவிதை பெண்ணாளோடு

கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்
இன்று
வகவக் கவியரங்கு
நூற்றிப் பதினேழு
வான்முட்டும் கரகோஷம்
ஒலிக்கும் நீகேளு

வாருங்கள்
கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்








கருத்துகள் இல்லை: