
Powered byIP2Location.com
சனி, 13 ஆகஸ்ட், 2011
வியாழன், 11 ஆகஸ்ட், 2011
அஷ்ரப் ஷிஹாப்தீனின் 'அவர்கள் வருகிறார்கள்' என்ற கவிதையை அவரது ப்ளாக்கில் வாசித்தபோது ஞாபகம் வந்த என் கவிதை
இக் கவிதை தினகரன் 'ஆலமுல் இஸ்லாம்' பகுதியில் 04/03/1994 அன்று வெளிவந்தது
படையெடுப்பை முறியடிப்போம்
இது
'அமல்' விளக்கேற்றி
அழகுபடுத்தும்
ரமழான் மாதம்
நாம்
நன்மை நோட்டுக்களைப்
பெற்றுக்கொள்ள
இறைவனிடம் கையேந்தும்
இன்னருள் மாதம்
என்ன அதிசயம்
இங்கே
எம்மிடம்
கையேந்திக்கொண்டு...
எங்கிருந்து வந்தார்கள்
இந்த ஏழைகள் ?
எங்கள் சில்லறைகளுக்காய்......
நாம்
இச்சை அடக்கும்
மாதத்தில்
பிச்சைக்காரர்கள்
தெருக்களத்தில்
'வியூகம்' அமைத்து
'பரணி' பாடி
அவர்கள்
'தர்ம யுத்தம்'
தொடுத்திருக்கிறார்கள்
சில்லறைத்தனமான
பணக்காரர் செயல்களால்
சில்லறைகளாய் போன
பிச்சைக்காரர்கள்
ரமழானே
அப்போராளிகள்
உனக்கெதிராய் அல்ல .....
பணத்திற்கு எதிராய்
அவர்கள் உன்னை
அசிங்கப்படுத்தவில்லை
பணக்காரர்
அசிங்கங்களை
வெளிப்படுத்துகிறார்கள்
கொடுக்க வேண்டியதை
எடுத்துக் கொண்ட
பணக்காரருக்கு எதிராக
போர்க்கொடி
தூக்கியிருக்கிறார்கள்
ஏழைச் சகோதரர்களை
ஊர்வலம் வைத்து
சந்தோசப்படும் அவர்கள்
நாளை
தலை குனிந்து செல்லப் போகும்
ஊர்வலத்தை உணராமல் ...........
ரமழானே
இந்த ஏழைகள்
படி அரிசிக்காய்
படி
ஏறி இறங்குவதை
தடுக்க நீ
வாரி வழங்குவதைச்
சொல்லித் தந்திருக்கிறாய்
கவலைப்படாதே
இந்தப்
பிச்சைக்காரர் போராட்டத்தை
முறியடிக்க
எங்கள் பணக்காரர்கள்
தயாராகிவிட்டார்கள்
சில்லறைச் 'ஷெல்'களால்
தாக்கி அல்ல
'ஸக்காத்' ஒப்பந்தத்தால்
தூக்கி
எனவே
இந்தப் பிச்சைகாரர்கள்
வரமாட்டார்கள்
எம்மை
அசிங்கப்படுத்த
போர்க்கொடி தூக்கிக்கொண்டு
இந்தப் பிச்சைகாரர்கள்
அடுத்த வருடம்
வரவே மாட்டார்கள்
என். நஜ்முல் ஹுசைன்
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
நோன்பின் மாண்பு- இது கட்டுரை அல்ல ஒரு எலி கதை
இது சென்ற வருடம் நடந்தது. எங்கள் அலுவலகத்தில் எலித் தொல்லை கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. எங்கே இருந்து வருகிறது. எதற்காக வருகிறது என்ற கண்டு பிடிக்கமுடியாது அவதிப்பட்டோம். ஆனால் சென்ற நோன்பு மாதம் வந்தபோதுதான் அதற்கான விடை கிடைத்தது.
சில பகற்பொழுதுகளில் கூட ஓடிப் பிடித்து விளையாடிய எலிகளை நோன்பு மாதத்திலே காணவே முடியவில்லை. தலையைப் பிய்த்துக்கொண்டு விடை தேடினோம்.
விடை கிடைத்தது. நோன்பு அல்லாத காலத்தில் நாம் பகல் வேளைகளில் உணவருந்திவிட்டு மிச்சம் மிகுதமிருந்த எச்சில்களை அலுவலகத்திற்குள்ளேயே
குப்பைத் தொட்டியில் போட்டோம். அதனை ருசிப் பார்க்கத்தான் அந்த எலிகள் அங்கே நடமாடியிருக்கின்றன. நோன்பு காலத்தில்தான் பகலிலே நாங்கள் எதுவுமே போடுவதில்லையே. இரவில் அலுவலகம் மூடி இருக்கும். அதனால் எங்கள் குப்பைத் தொட்டி நோன்பு காலத்தில் எப்போதுமே சுத்தமாகவே இருக்கும். இனி அங்கே எலிகளுக்கு என்ன வேலை.
இது ஒன்றை எங்களுக்கு நன்கு புலப்படுத்தியது. எப்போதும் சுத்தமாகவே வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு எலிகள் வருவதில்லை.
சில பகற்பொழுதுகளில் கூட ஓடிப் பிடித்து விளையாடிய எலிகளை நோன்பு மாதத்திலே காணவே முடியவில்லை. தலையைப் பிய்த்துக்கொண்டு விடை தேடினோம்.
விடை கிடைத்தது. நோன்பு அல்லாத காலத்தில் நாம் பகல் வேளைகளில் உணவருந்திவிட்டு மிச்சம் மிகுதமிருந்த எச்சில்களை அலுவலகத்திற்குள்ளேயே
குப்பைத் தொட்டியில் போட்டோம். அதனை ருசிப் பார்க்கத்தான் அந்த எலிகள் அங்கே நடமாடியிருக்கின்றன. நோன்பு காலத்தில்தான் பகலிலே நாங்கள் எதுவுமே போடுவதில்லையே. இரவில் அலுவலகம் மூடி இருக்கும். அதனால் எங்கள் குப்பைத் தொட்டி நோன்பு காலத்தில் எப்போதுமே சுத்தமாகவே இருக்கும். இனி அங்கே எலிகளுக்கு என்ன வேலை.
இது ஒன்றை எங்களுக்கு நன்கு புலப்படுத்தியது. எப்போதும் சுத்தமாகவே வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு எலிகள் வருவதில்லை.
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011
புதன், 3 ஆகஸ்ட், 2011
இஸ்லாமிய கீதம் - நோன்பு
என்னால் எழுதப் பட்ட இந்த இஸ்லாமிய கீதம் 2010 நோன்புப் பெருநாள் தினத்தன்று பிரபல பாடகர் டோனி ஹசன், அமீர் கான் ஆகியோரால் நேத்ரா தொலைக்காட்சியில் பாடப்பட்டது. இசை: அமீர் கான்
தலையை சாய்த்து இறையை வணங்க
சொல்லித் தந்தது - ரமழான்
இதயந் தன்னை கழுவிவிட்டு
இன்று மகிழ்ந்தது
எங்கள் வயிறு நோன்பு என்ற
பாடம் கற்றது - இதயம்
அமலில் லயித்து பாவம் விட்டு
சித்தி பெற்றது
உலக மெல்லாம் ஒன்று சேர்ந்து
பசித் திருந்தது - அல்லாஹ்
கட்டளைக்கே அடி பணிந்து
இன்பம் கண்டது
உண்மை முஸ்லிம் வாழ்வு என்ன
நோன்பு சொன்னது - இதிலே
நிலைத்து நிற்கும் மாந்த ருக்கு
சொர்க்கம் தந்தது
- என். நஜ்முல் ஹுசைன்
தலையை சாய்த்து இறையை வணங்க
சொல்லித் தந்தது - ரமழான்
இதயந் தன்னை கழுவிவிட்டு
இன்று மகிழ்ந்தது
எங்கள் வயிறு நோன்பு என்ற
பாடம் கற்றது - இதயம்
அமலில் லயித்து பாவம் விட்டு
சித்தி பெற்றது
உலக மெல்லாம் ஒன்று சேர்ந்து
பசித் திருந்தது - அல்லாஹ்
கட்டளைக்கே அடி பணிந்து
இன்பம் கண்டது
உண்மை முஸ்லிம் வாழ்வு என்ன
நோன்பு சொன்னது - இதிலே
நிலைத்து நிற்கும் மாந்த ருக்கு
சொர்க்கம் தந்தது
- என். நஜ்முல் ஹுசைன்
செவ்வாய், 26 ஜூலை, 2011
'இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி'
இலங்கை மண்ணின் பிரபல முஸ்லிம் பாடசாலையான கொழும்பு சாஹிரா கல்லூரி 2004 ம் ஆண்டு தமிழ் விழாவினை நடாத்தியது. அப்போது 'இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி' என்ற தலைப்பில் விசேட கவியரங்கொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிப்டீன், காத்திபுல் ஹக் எஸ். ஐ. நாகூர் கனி, மேமன் கவி ஆகியோருடன் நானும் கவிதை பாடினேன். கலைவாதி கலீலின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் அன்றைய தினம் என்னால் பாடப்பட்ட கவிதை.
கவிக்கோ அப்துல் ரகுமான் கவியரங்கிற்கு முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி'
கவிக் கோலம் போட
மட்டுமல்ல
எங்கள்
கவிக் (கு) 'ஓ' போடவும்
கவிக்கோ இங்கே
அப்துல்,
ரகு-மானைத்
தேடிப் போனதுடன்
நின்று விடாமல்
ஈமானையும்
நாடி வந்ததில்
எங்களுக்கெல்லாம்
பெருமிதம்
'இஸ்லாம் எங்கள் வழி
இன்பத் தமிழ் எங்கள் மொழி'
என்ற தலைப்பு
கவிக்கோ அவர்களே
உங்களால்
தலைப் பூ
சூடிக் கொண்டுள்ளது
கோ இருப்பதனால்
மந்திரி பிரதானிகளாய்
சபையோரே
நீங்களும் அங்கே
ஆஸ்தான புலவர்களாய்
நாங்களும் இங்கே
அனைவரையும் வாழ்த்தி வரவேற்று...
அந்த
(ஹி) ராக் குகைதானே
இந்த உலகிற்கு
பகலைத் தந்தது
இந்த
சாஹிரா பிறைதானே
நம் சமுதாயத்திற்கு
பகலையும்
பல்கலையும் தந்தது
சாஹிராவே
உன்னால்தானே
முஸ்லிம்கள்
எங்களுக்கு
முதுகெலும்பு கிடைத்தது -
அறிஞர் மத்தியில்
நிற்பதற்கு
நாம் வெறும்
கல்லாய் இருந்தோம் -
கல்லா பெட்டிக்கருகில்
எம்மை
'கல்'
என்று கூட்டி வந்து
மாணிக்கக் கல்லாய்
மாற்றினாயே
சாஹிரா
ஒரு கர்ப்பிணித் தாய்
இங்கே
அறிஞர்கள்
சூல் கொண்டிருக்கிறார்கள்
பெரிதுவக்கும் பாக்கியம்
எப்போதுமே
உனக்கிருக்கிறது
தமிழ் இனி
மெல்லச் சாகும்
என்றார்கள்
சாவது என்ன
விழுவதற்கே
விடமாட்டோம்
நாமிருக்கும் வரை
தமிழ் 'விழா' (து)
என்று
மார் தட்டி
தமிழ் விழா
எடுத்திருக்கிறார்கள்
தமிழே
இங்கு வாழும்
முஸ்லிம்கள்
உனக்கு
விழா எடுக்கக்
கடமைப்பட்டிருக்கிறார்கள்
ஏனெனில்
'லா இலாஹா
இல்லல்லாஹ்'
என்று
அரபு சொன்னபோது
'வணக்கத்திற்குரிய
நாயன் யாருமில்லை
அல்லாஹ்வைத் தவிர'
என்று சொல்லித் தந்தது
தமிழே
நீயல்லவா
நீதானே எங்களுக்கு
இஸ்லாத்தைப் போதித்தாய்
நீதானே எங்களுக்கு
இஸ்லாத்தைப் போதித்த தாய் !
மக்கத்தில்
குப்ரியத் கல்
பெயர்க்கப்பட்ட
வரலாறு சொல்லி
ஈமானின் அடிக்கல்லை
எமது இதயத்தில் நட்டியது
நீயல்லவா
இதயம் நுழைந்து
நாவில் உலா வரும்
நீ
இஸ்லாத்தை
எம் செவிக்குள் நுழைத்து
இதயத்தில் நிரப்பினாய்
நீ எமக்கு
தமிழ் பால் தந்தாய்
அது
எம் உடம்பில்
இஸ்லாமிய இரத்தமாய்....
நீ பேசப்பட்டாய்
எம் மார்க்கம்
வளர்ந்தது
இஸ்லாம் ஒரு மரம்
அது வளர
நீ ஒரு
உரம்
அல்லாஹ் உன்னை
நாவுகளில் நடமாடவைத்து
கல்புகளிலே
இஸ்லாத்தை
இடம் பிடிக்க வைத்தான்
இஸ்லாம்
உலகிற்கு வழி காட்டியது
நீ அதனை
உள்ளங்களுக்கு
வழி காட்டினாய்
இன்னுயிர் தமிழே,
எங்கள் பேச்சு வழக்கிலே
சில வேளை நீ
காயப்பட்டாலும்
மறந்துவிடாதே
அது
அன்புக் காயம்
எங்கள்
வீடுகளிலும்
வீதிகளிலும் நீ
வியாபித்திருக்கிறாய்
நீ
எங்களோடு இருக்கிறாய்
நாங்கள்
உன்னோடுதான் இருக்கிறோம்
என்றாலும்,
தமிழா 'கம்'
என்று தமிழகம்
உன்னை
வெள்ளைக்காரன்
வீட்டுப்படிகளில்
நிற்கவைக்கப்பார்க்கிறது
அப்போதுதானே
உண்மையிலேயே
நீயும், நாங்களும்
காயப்பட்டுப்போகிறோம்
ஆங்கிலத்திலேயே நடக்கும்
தமிழ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே
நீயும், நாங்களும்
முடமாகிப்போகிறோம்
ஆங்கிலம் நடக்கிறது
நாங்கள்
முடமாகிப்போகிறோம்
தனித் தமிழுக்காய்
போராடிய மண்ணில்
தமிழே நீ
தனித்த
தமிழாகிவிடுவாயோ ?
தமிழகமே
உன்னால்தானே
நாங்கள்
தமிழைப் பேச
கற்றுக்கொண்டோம்
நீதானே
எங்கள் காதில்
தேனை ஊற்றினாய்
இன்று நீ ஏன்
தமிழ் பேச
தடுமாறுகின்றாய் ?
ஆங்கிலம்
உன் நாவில்
முடிச்சுப் போட்டதோ -
மூன்று முடிச்சு ?
தமிழ் இனி
மெல்லச் சாகுமா
இல்லை
இப்போதுள்ள பேரப்பிள்ளைகள்
வாயில் போட்டு
மெள்ளச் சாகுமா
என்ற நடுக்கம்.........
கொள்ளத்
தேவையில்லை
சாவது என்ன
விழுவதற்கே
விடமாட்டோம்
நாமிருக்கும் வரை
தமிழ் விழா (து)
தமிழே
நாம் உன்னைப்பற்றி
பெருமை கொள்கிறோம்
ஏனெனில்
உன்னைப் பற்றித்தானே
இஸ்லாத்தின் மேல்
பற்று வைத்தோம்
அதனால்தானே
வல்லான் அல்லாஹ்
காத்திருக்கிறான்
எங்களையும்
சொர்க்கத்தில்
பற்று வைக்க !
-என். நஜ்முல் ஹுசைன்
கவிக்கோ அப்துல் ரகுமான் கவியரங்கிற்கு முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி'
கவிக் கோலம் போட
மட்டுமல்ல
எங்கள்
கவிக் (கு) 'ஓ' போடவும்
கவிக்கோ இங்கே
அப்துல்,
ரகு-மானைத்
தேடிப் போனதுடன்
நின்று விடாமல்
ஈமானையும்
நாடி வந்ததில்
எங்களுக்கெல்லாம்
பெருமிதம்
'இஸ்லாம் எங்கள் வழி
இன்பத் தமிழ் எங்கள் மொழி'
என்ற தலைப்பு
கவிக்கோ அவர்களே
உங்களால்
தலைப் பூ
சூடிக் கொண்டுள்ளது
கோ இருப்பதனால்
மந்திரி பிரதானிகளாய்
சபையோரே
நீங்களும் அங்கே
ஆஸ்தான புலவர்களாய்
நாங்களும் இங்கே
அனைவரையும் வாழ்த்தி வரவேற்று...
அந்த
(ஹி) ராக் குகைதானே
இந்த உலகிற்கு
பகலைத் தந்தது
இந்த
சாஹிரா பிறைதானே
நம் சமுதாயத்திற்கு
பகலையும்
பல்கலையும் தந்தது
சாஹிராவே
உன்னால்தானே
முஸ்லிம்கள்
எங்களுக்கு
முதுகெலும்பு கிடைத்தது -
அறிஞர் மத்தியில்
நிற்பதற்கு
நாம் வெறும்
கல்லாய் இருந்தோம் -
கல்லா பெட்டிக்கருகில்
எம்மை
'கல்'
என்று கூட்டி வந்து
மாணிக்கக் கல்லாய்
மாற்றினாயே
சாஹிரா
ஒரு கர்ப்பிணித் தாய்
இங்கே
அறிஞர்கள்
சூல் கொண்டிருக்கிறார்கள்
பெரிதுவக்கும் பாக்கியம்
எப்போதுமே
உனக்கிருக்கிறது
தமிழ் இனி
மெல்லச் சாகும்
என்றார்கள்
சாவது என்ன
விழுவதற்கே
விடமாட்டோம்
நாமிருக்கும் வரை
தமிழ் 'விழா' (து)
என்று
மார் தட்டி
தமிழ் விழா
எடுத்திருக்கிறார்கள்
தமிழே
இங்கு வாழும்
முஸ்லிம்கள்
உனக்கு
விழா எடுக்கக்
கடமைப்பட்டிருக்கிறார்கள்
ஏனெனில்
'லா இலாஹா
இல்லல்லாஹ்'
என்று
அரபு சொன்னபோது
'வணக்கத்திற்குரிய
நாயன் யாருமில்லை
அல்லாஹ்வைத் தவிர'
என்று சொல்லித் தந்தது
தமிழே
நீயல்லவா
நீதானே எங்களுக்கு
இஸ்லாத்தைப் போதித்தாய்
நீதானே எங்களுக்கு
இஸ்லாத்தைப் போதித்த தாய் !
மக்கத்தில்
குப்ரியத் கல்
பெயர்க்கப்பட்ட
வரலாறு சொல்லி
ஈமானின் அடிக்கல்லை
எமது இதயத்தில் நட்டியது
நீயல்லவா
இதயம் நுழைந்து
நாவில் உலா வரும்
நீ
இஸ்லாத்தை
எம் செவிக்குள் நுழைத்து
இதயத்தில் நிரப்பினாய்
நீ எமக்கு
தமிழ் பால் தந்தாய்
அது
எம் உடம்பில்
இஸ்லாமிய இரத்தமாய்....
நீ பேசப்பட்டாய்
எம் மார்க்கம்
வளர்ந்தது
இஸ்லாம் ஒரு மரம்
அது வளர
நீ ஒரு
உரம்
அல்லாஹ் உன்னை
நாவுகளில் நடமாடவைத்து
கல்புகளிலே
இஸ்லாத்தை
இடம் பிடிக்க வைத்தான்
இஸ்லாம்
உலகிற்கு வழி காட்டியது
நீ அதனை
உள்ளங்களுக்கு
வழி காட்டினாய்
இன்னுயிர் தமிழே,
எங்கள் பேச்சு வழக்கிலே
சில வேளை நீ
காயப்பட்டாலும்
மறந்துவிடாதே
அது
அன்புக் காயம்
எங்கள்
வீடுகளிலும்
வீதிகளிலும் நீ
வியாபித்திருக்கிறாய்
நீ
எங்களோடு இருக்கிறாய்
நாங்கள்
உன்னோடுதான் இருக்கிறோம்
என்றாலும்,
தமிழா 'கம்'
என்று தமிழகம்
உன்னை
வெள்ளைக்காரன்
வீட்டுப்படிகளில்
நிற்கவைக்கப்பார்க்கிறது
அப்போதுதானே
உண்மையிலேயே
நீயும், நாங்களும்
காயப்பட்டுப்போகிறோம்
ஆங்கிலத்திலேயே நடக்கும்
தமிழ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே
நீயும், நாங்களும்
முடமாகிப்போகிறோம்
ஆங்கிலம் நடக்கிறது
நாங்கள்
முடமாகிப்போகிறோம்
தனித் தமிழுக்காய்
போராடிய மண்ணில்
தமிழே நீ
தனித்த
தமிழாகிவிடுவாயோ ?
தமிழகமே
உன்னால்தானே
நாங்கள்
தமிழைப் பேச
கற்றுக்கொண்டோம்
நீதானே
எங்கள் காதில்
தேனை ஊற்றினாய்
இன்று நீ ஏன்
தமிழ் பேச
தடுமாறுகின்றாய் ?
ஆங்கிலம்
உன் நாவில்
முடிச்சுப் போட்டதோ -
மூன்று முடிச்சு ?
தமிழ் இனி
மெல்லச் சாகுமா
இல்லை
இப்போதுள்ள பேரப்பிள்ளைகள்
வாயில் போட்டு
மெள்ளச் சாகுமா
என்ற நடுக்கம்.........
கொள்ளத்
தேவையில்லை
சாவது என்ன
விழுவதற்கே
விடமாட்டோம்
நாமிருக்கும் வரை
தமிழ் விழா (து)
தமிழே
நாம் உன்னைப்பற்றி
பெருமை கொள்கிறோம்
ஏனெனில்
உன்னைப் பற்றித்தானே
இஸ்லாத்தின் மேல்
பற்று வைத்தோம்
அதனால்தானே
வல்லான் அல்லாஹ்
காத்திருக்கிறான்
எங்களையும்
சொர்க்கத்தில்
பற்று வைக்க !
-என். நஜ்முல் ஹுசைன்
வெள்ளி, 22 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
