எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

மா மேதை அப்துல் கலாம்



ஓர்
ஒப்பாரிப் பாட
வரவில்லை

உங்களை
ஒப்பிட்டுப் பார்க்க
வந்தேன்

அப்துல் கலாம்
அவர்களே

இந்தியாவுக்கே
உப்பிட்ட உங்களை
ஒப்பிட்டுப் பார்க்க
வந்தேன்

அவன் அள்ளி வழங்கிய
பாரி
நீங்களோ மக்களுக்காய்
எல்லாவற்றையும் வைத்துவிட்டு
கொஞ்சமாய்
கிள்ளி எடுத்த
பாரி

அவர்கள்
அணு அணுவாய்
அனுபவித்தார்கள்

நீங்கள்
அணுவைத்தானே
அனுபவித்தீர்கள்

நீங்கள்
ஜனாதிபதியாய் வாழ்ந்திருக்கிறீர்கள்

4.
பலர்
செத்துப் போயிருக்கிறார்கள்

இந்தியாவுக்கே
குடைப் பிடித்த நீங்கள்
கிழிந்த குடை தைக்கும்

சகோதரருக்காய்
ஒரு
கடை கூட திறக்காமல்....

ஆப்பிரகாம் லிங்கன்
ஜனநாயகத்துக்கு
வரைவிலக்கணம்
சொல்லப்போய்
வார்த்தைகளை
வீணாக்கியுள்ளார்

'மக்களின்
மக்களால்
மக்களுக்காக'  என்று

உங்களைக் கண்டிருந்தால்
அது
அப்துல் கலாம் என்றிருப்பார்

அப்துல் கலாமே
உங்களோடு ஒப்பிடுவதற்கு
உங்கள் அருகில் கூட
ஒருவருமில்லையே

அதனால் நான்
ஒப்பிட்டுப் பார்க்க வரவில்லை

உங்களுக்கில்லா
ஒப்பாரி யாருக்கென்று
ஒப்பாரிப் பாடத்தான்
வந்தேன்

சனி, 18 ஜூலை, 2015


வசந்தம் எப்.எம். வானொலி நோன்புப் பெருநாள் தினமான 18-07-2015 அன்று காலை 8.30 க்கு எனது குரலில் ஒலிபரப்பிய கவிதை







தூசு தட்டி
துப்பரவாக்கி வைத்திருந்தோம்
எங்கள் மனங்களை
ரமழானே
நீ வந்து எங்கள் இதயங்களில்
இபாதத் செய்யவேண்டும்
என்பதற்காய்

நீ வந்தாய்
ரமழானே நீ வந்தாய்

பாவிகளாய் இருந்த நாங்கள்
ஞானிகள் ஆனோம்

கல்லாய் இருந்த எங்களை
வைரக்
கல்லாய் ஜொலிக்கச் செய்தாய்
என்று
பெருமை கொண்டோம்

சொர்க்கத்தின் வாரிசுகளாய்
எங்கள் பெயர்களையும்
எழுதிச் சென்றாய்
என்று

இறுமாப்புக் கொண்டோம்

எங்கள் கால்களை
ஷவ்வாலிடம்
ஒப்படைத்துவிட்டுச் சென்றாயே
ரமழானே

ரமழானை
அனுபவித்த சுகந்தத்தில்
இன்று
ஈதுப் பெருநாள் கொண்டாடுகிறோம்

ஈதுப் பெருநாள்
நாம் கொண்டாட
இது பெருநாளா என்று
திண்டாடும் ஒரு கூட்டம்

ரமழானில் நாம்
தின்பதற்கான வயிறுகளைக்
கட்டிப்போட்டோம்

இந்த
ஷவ்வால் பெருநாளிலும்
தின்பதற்கான வயிறுகளைத்
திறக்க முடியாது
ஒரு கூட்டம்

சொர்க்கத்தில்
எங்கள் பெயர்களும் இருக்கிறதா

உறுதிப்படுத்திக் கொள்ள
அந்த
ஏழைகளின் வயிறுகளைப் பாருங்கள்

அந்த வயிறுகளும்
நிரம்பிய பின்புதானே
ரமழான் எங்கள் இபாதத்களை
சொர்க்கத்தில் ஒப்படைக்க
தூக்கிச் செல்லும்

ஈதுப் பெருநாள்
இது உங்களுக்கும் பெருநாள்தான் என
ஏழைகளிடம்
பிரகடனப்படுத்துங்கள்

ஷவ்வால் தன்
செவ் வாய்த்திறந்து
கூறும்
நாங்கள்
சொர்க்கத்தின் சொந்தக்காரர்கள்
என்று !

ஈத் முபாரக்

-    என். நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 31 மார்ச், 2015





free website counter

புதன், 25 மார்ச், 2015

இஸ்லாமிய கீதம் - இயற்றியவர் : என். நஜ்முல் ஹுசைன். பாடியவர்: ஈழத்து இசை முரசு கலைக்கமல்
https://www.filepicker.io/api/file/mVqhhhRKa1edcCdFAxRw

வியாழன், 12 மார்ச், 2015

Map IP Address
Powered byIP2Location.com

சனி, 7 மார்ச், 2015



இலங்கையில் கைபேசி மொபைல்கள் வந்த ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட கவிதை. (15-2-1994) அப்போதுள்ள மொபைல்போன்களுக்கு நீட்டிக் கொண்டு ஏரியல்கள் இருந்தன. அத்தோடு வரும் அழைப்புகளுக்கும் கட்டணம் அறவிடப்பட்டன.

தொலைபேசி குழந்தை

 

-    என் நஜ்முல் ஹுசைன்

தொலைபேசி அன்னைக்கு
இங்கும் ஒரு
பிரசவம் நடந்துள்ளது

அமைதியாய்
ஆயிரம் முட்டைகள்

முத்தமிட்டால் மட்டுமே
காசு கேட்டாள்
அன்னை

காதை வைத்தாலும்
காசு கேட்கும்                         
குழந்தை

ஓற்றைக்கொம்பு
குழந்தை
தொப்புள்கொடி
அறுத்துக் கொண்டு

அதனால்
செல்லும் இடங்களுக்கெல்லாம்
தூக்கிச் சென்று
கொஞ்சி மகிழும்
நாங்கள் -
இப்போது எங்களுக்கும்
கொம்பு முளைத்திருக்கிறது