வலம்புரி கவிதா வட்டத்தின் 118 ஆவது கவியரங்கு 03.01.2026 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)
வழிகாட்டும் ஒளி விளக்காய்
இவரும் இங்கே
வீற்றிருந்து மாணவர்கள்
உலகம் செய்தார்
விழிதிறந்தார் இவரென்று
போற்றி மகிழ்ந்து
வீறுடனே பலரின்று
உயரம் தொட்டார்
களிப்புடன் நான்
இவரிடமே கற்றேன் என்று
கண்களிலே நீர் முட்ட
சொல்லி இவர்க்கு
அளிக்கின்றார் அள்ளி அள்ளி பிரார்த் தனைகள்
இலக்கியமே என்றதுமே
தூரம் மறந்து
இன்பமுடன் சுறுசுறுப்பாய்
பறந்து வருவார்
நிலவுஅது பௌர்ணமியாய் ஜொலிக்கும் நாளில்
நின்றிடுவார் வகவத்தின்
வாசல் வந்து
உலவுகின்ற உறவுக்கு
பாலம் அமைத்து
உயரத்தில் நின்றிருப்பார்
எங்கள் மனதில்
பலமாக இவர் எமக்கு
ஆனார் வகவ
பாதையிலே ராஜநடை போடுகின்றார் -
ராஜன் நடை போடுகின்றார்
நமடகஹ வரலாறு தன்னை எழுதி நல்லதொரு பணி செய்து
தலையும் நிமிர்ந்தார்
கமகமக்கும் கவிதைகளால்
எங்கள் மேடை
கலகலப்பாய் ஆவதற்கு
துணையும் நின்றார்
நமதுள்ளம் கவர்ந்தவரை
அழைத்து வந்து
நாமின்று இவ்வரங்கின்
தலைமை தந்தோம்
எமதரங்கின் தலைமை கவி
ராஜன் நசீர் தீன்
எழுகின்ற கரவோசை
வாழ்த்தும் உமையே
கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன்
கவியரங்கில் நாம் தொட்டோம் நூற்று பதினெட்டு
உங்கள் தலைமையிலே ஜொலிக்கட்டும் புதுமை பல தொட்டு தமிழ் பாலில் தேன் கலந்து
நீ முரசு கொட்டு
சபையே
கவியரங்கு கலகலக்க
நீ கையைத் தட்டு
வாருங்கள்
கவிஞர் கலவெல ராஜன் நசீர்தீன் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக