அவர்கள்
துல்ஹஜ்ஜிலும்ரமழானோடு வாழ்கையில்
வீடில்லாமல் இருக்கும்
அவர்களுக்கு எதிராய்
வீட்டோ இருக்கையில்
'நாவே'
நா அடங்கிப் போயிருக்கையில்
எப்படி
சுதந்திரமாய் சொல்லமுடியும்
ஈத் முபாரக்
- என். நஜ்முல் ஹுசைன்
அவர்கள்
துல்ஹஜ்ஜிலும்வலம்புரி கவிதா வட்டத்தின் 110 ஆவது கவியரங்கு 12/04/2025 சனிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞரும் எழுத்தாளருமான எம்.ஏ. ரஹீமா அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்,
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
எழுத்துலகை நிமிர்ந்தேதான்
பார்க்க வைத்தார்
எழுத்தாளர் பலர்மனதை
கொள்ளையிட்டார்
அழுதிருக்கும் சமூகத்தின்
அவலம்தீர
அடம்பிடித்தே தன் எழுத்தில்
படமும் பிடித்தார்
எழுந்திருக்கும் சிறுகதையில்
கவிதையுலகில்
எடுப்பாக இவர்நின்று
மிளிருகின்றார்
உண்மைதான் சிலகாலம்
அஞ்ஞா வாசம்
இவர்புரிந்து
பண்ணாமல் எழுத்துப் பணியும்
தனித்திருந்தார்
கண்ணியமாய் வகவம் தான்
இழுத்து வந்து
கசடறவே எழுதுங்கள்
மீண்டும் என்று
திண்ணியமாய் உற்சாகம்
ஊட்டியதை
இவ்விடத்தில் சொல்வது எம் கடமையன்றோ
கல்வியிலும் முடிசூடி இருந்த
எம்ஏ
ரஹீமா வின்
பேராற்றல் மீண்டும்
துளிர்க்க
எல்லையற்ற மகிழ்ச்சியுடன்
எழுதுகின்றார்
கவியரங்க தலைமையினில்
அன்றும் ஜொலித்த
வல்லவராம் ரஹீமாவை
விழைந்தே அழைத்தோம்
நூற்றிபத்தின் தலைமையினை
அவர்க்கே தந்தோம்
கவிஞர், எழுத்தாளர்
எம்.ஏ. ரஹீமா
110 ஆவது கவியரங்கம்
உங்களிடத்தில்
எம் கவிஞர்கள்
வைக்கட்டும் உங்களை
உயரிடத்தில்!
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 16/03/2025 ஞாயிறு இரவு ஒலிபரப்பான கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'கவிதா நதி' யில் ஒலிபரப்பான எனது ரமழான் கவிதை.
வெலிமடை ரபீக்
நீ
நோய்வாய்பட்டிருக்கிறாய்
என்று கேள்விப்பட்டதும்
என் வாய்
நோய்ப்பட்டது
அதனால்
எனது கவிதையில்
திக்கலும், திணறலும்
விக்கலும் இருக்கலாம்
ஆனாலும்
இந்த வாழ்த்துக் கவிதையில்
எந்த சிக்கலும் இருக்காது
ஏனெனில்
இது வெறும்
வாழ்த்துக் கவிதை அல்ல
எனது
இல்லை இல்லை
இங்கிருக்கும் அனைவரினதும்
பிரார்த்தனைக் கவிதை
கவிதைகளுக்கும்
பிரார்த்தனைகளுக்கும்
சக்தி இருக்கிறது
உனது துன்பங்களோடு
பேச்சு வார்த்தை நடாத்த
கவிஞனே
இலட்சங்கள் உன்னை
அலட்சியப்படுத்தலாம்
இதயங்கள் உன்னோடு
உறவாட மறக்காது
உன் கூர்
மைக் கவிதைகள்
"மைக் " கவிதைகளாய்
வாசகர்கள்
இதயங்களில் எதிரொலித்தது
செவிப்பறைகளில் அதிரும்
மானுடர்
இடர் களைய
நீ வடித்த கண்ணீர்
கவிதை பிரக்ஞையில்லா
மானுடர்க்கும்
முடர் நீர் பருக்கும்
நீ கவிஞனென
உன்னை அடையாளப்படுத்திய
வரிகளிலே
ஜொலிக்கும் உன் புகழ்
தாய்ப்பாலை
பால் மாக்களிலே கரைக்கும்
அன்னையருக்காய்
நீ வடித்தாய்
'பாழ்' மானுட கவிதை
அன்னையரே
அது பால் மாதிரி அல்ல
பாழ் மானுட என்று
விழிகளைத் திறந்து வைத்தாய்
கவிதைகளோடு பயணித்து
எங்கள் இதயங்களோடு
கை கோர்த்தவனே
வலிமையான வார்த்தைகளால்
கவிதை யாத்தவனே
கவலைப்படாதே
உனக்கும்
பூக்காலம் பூக்கலாம்
இன்னும் இன்னும் நீ
கவிதை படைக்க வேண்டும்
இன்னும் மின்னும்
கவிதை படைக்க வேண்டும்
நீ நீடு வாழ
சுகதேகியாய்
கவிதை உலகை ஆள
இது இதயத்துப் பிரார்த்தனை
இந்தக் கண்ணீரில்
மீன்கள் மட்டுமல்ல
ஆமீன்களும் இருக்கின்றன!
(கவிஞர் வெலிமடை ரபீக் அவர்களின் 'பூக்காலம் ' நூல் வெளியீட்டு விழா 2017 ல் கொழும்பு, அல்ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)